பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் 166 ரன்களுக்கு இலங்கை ஆல் அவுட்!

Published by
பாலா கலியமூர்த்தி

பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் பொட்டின் முதல் இன்னிஸில் இலங்கை 166 ரன்களுக்கு ஆல் அவுட்.

இலங்கைக்கு சென்றுள்ள பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், காலேயில் நடந்த இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இதையடுத்து, இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்புவில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி, முதல் இன்னிஸில் இலங்கை அணி வீரர்கள் நிசன் மதுஷ்கா மற்றும் கருணாரத்னே தொடக்க ஆட்டக்காரர்களாகக் களம் இறங்கினர்.

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், இலங்கை அணி பேட்ஸ்மேன்கள் தடுமாறினார். இதனால், தொடர் விக்கெட்டை இழந்து இறுதியில் முதல் இன்னிஸில் இலங்கை அணி 48.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 166 ரன்களில் ஆல்அவுட் ஆனது. இப்போட்டியில் அபாரமாக பந்து வீசிய பாகிஸ்தான் வீரர் அப்ரார் அகமது 4, நசீம் ஷா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து, முதல் இன்னிஸில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, ஒரு விக்கெட்டை இழந்து 120 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. களத்தில் அப்துல்லா ஷபீக் 60 ரன்களும், ஷான் மசூத் 51 ரன்களும் எடுத்து விளையாடி வருகின்றனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

12 hours ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

12 hours ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

13 hours ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

13 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

15 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

16 hours ago