பந்து வீச்சில் மிரட்டிய இந்தியா ..159 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆப்கானிஸ்தான்..!

Published by
அகில் R

இந்தியா, ஆப்கானிஸ்தான் இடையே முதல் டி20 மொஹாலியில் உள்ள பிந்த்ரா மைதானத்தில் 7 மணிக்கு  தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான் இருவரும் களமிறங்கினர். இவர்களின் நிதானமான ஆட்டம் அணிக்கு நல்ல தொடக்கமாக இருந்தது. இருவரின் கூட்டணியில் 50 ரன்களை எட்டிய போது அந்த அணியன் முதல் விக்கெட்டை அக்சர் படேல் கைப்பற்றினர். இதனால் ரஹ்மானுல்லா குர்பாஸ் 23 ரன்னில் வெளியேறினார்.

அடுத்தடுத்த ஒவரிலே மற்றோரு தொடக்க வீரர் இப்ராஹிம் சத்ரான் 25 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். இதன் காரணமாக இந்திய அணி 9 ஓவரில் இரு விக்கெட்டுகளை எடுத்து ஆட்டத்தை தங்களது கட்டுக்குள் கொண்டு வந்தது. பின்னர் களமிறங்கிய வீரர்கள் நின்று நிதானமாக விளையாடினர். ஒரு முனையில் அஸ்மத்துல்லா உமர்சாய் நின்று நிதானமாக ரன்களை சேர்க்க மறுமுனையில் முகமது நபி இந்திய அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தார்.

இருவரின் கூட்டணியில் 68 ரன்களை கடந்த போது 18-வது ஓவரின் முதல் பந்தில் அஸ்மத்துல்லா உமர்சாய், முகேஷ் குமாரின் பந்தில் போல்டனார். அதே நேரத்தில் 18-வது ஓவரின் கடைசி பந்தில் சிறப்பாக விளையாடி வந்த முகமது நபி அரைசதம் பூர்த்தி செய்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் 42 ரன்னில் பெவிலியன் திரும்பி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

இந்நிலையில் இறுதியாக ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 158 ரன்கள் எடுத்தனர். இதில் அதிகபட்சமாக முகமது நபி 42 ரன்கள் குவித்தார். இந்திய அணியில் அக்சர் படேல் , முகேஷ் குமார் தலா 2 விக்கெட்டை பறித்தனர். 159 ரன்கள் என்ற எளிதான இலக்குடன் இந்திய அணி களமிறங்க உள்ளது.

 

Published by
அகில் R

Recent Posts

இந்தியா போட்டியை நீங்க பாத்துக்கோங்க…நான் BBL போறேன்! இங்கிலாந்துக்கு டாடா சொன்ன ஆர்ச்சர்!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது. இந்த தொடரின்…

15 minutes ago

அடுத்தடுத்து கோளாறாகும் ஏர் இந்தியா விமானங்கள்? பதற்றத்தில் பயணிகள்!

கொல்கத்தா : ஏர் இந்தியா விமானங்களில் அடுத்தடுத்து தொழில்நுட்பக் கோளாறுகள் கண்டறியப்பட்டு வருவதால் பயணிகள் மிகவும் அதிர்ச்சியடைந்து இனிமேல் விமானத்தில்…

48 minutes ago

டெஹ்ரானில் இருந்து உடனடியாக அனைவரும் வெளியேறுங்கள்! அலர்ட் கொடுத்த டொனால்ட் டிரம்ப்!

இஸ்ரேல் : ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் தொடர் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட்…

1 hour ago

இன்று இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

சென்னை : வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக…

2 hours ago

ஈரான் அரசு தொலைக்காட்சி அலுவலகத்தை நொறுக்கிய இஸ்ரேல்.! தாக்குதலின் நேரடியாக ஒளிபரப்பு காட்சி..,

இஸ்ரேல் : ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஈரானின் அரசு…

10 hours ago

மதிமுக அலுவலகத்தில் அடையாளம் தெரியாத நபர் கல் வீச்சு தாக்கியதால் பரபரப்பு.!

சென்னை : சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தின் மீது, இன்று அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தாக்குதல்…

11 hours ago