இறுதி ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தாலும், மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வென்றது.
இந்த தொடர் வெற்றி ஆஸ்திரேலிய அணிக்கு ஐசிசி உலகக் கோப்பை சூப்பர் ஒன் டே லீக் புள்ளிகள் அட்டவணையில் ஒரு நன்மையை அளித்துள்ளது. இதன் மூலம்,ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தை முந்தி 40 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது.
இங்கிலாந்து அணி இப்போது 30 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஒன்பது புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளது. ஐ.சி.சி யின் 2023 ஆம் ஆண்டில் நடக்கவிருக்கும் உலககோப்பைக்கு 13 அணிகளை கொண்ட உலகக் கோப்பை சூப்பர் ஒன் டே என்று இந்தாண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இதிலிருந்து நேரடியாக 7 அணிகள் உலககோப்பைக்கு தேர்வு செய்யப்படும். இதற்கு முந்தைய தொடரில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை தோற்கடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி : பனிமய மாதா பேராலயத்தின் 443-வது ஆண்டு திருவிழா நேற்று கொடி பவனியுடன் தொடங்கி, இன்று (ஜூலை 26)…
தூத்துக்குடி : தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையம் இன்று (ஜூலை 26, 2025) இரவு 8 மணிக்கு பிரதமர்…
சென்னை : அன்புமணியின் 'தமிழக உரிமை மீட்பு பயணம்' திட்டமிட்டபடி தொடரும் என்று டிஜிபி அலுவலகம் விளக்கமளித்துள்ளது. முன்னதாக, அன்புமணி…
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் கடந்த ஜூலை 12 அன்று 10 வயது சிறுமி பள்ளி முடிந்து…
தூத்துக்குடி : 2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார். தற்போது மாலத்தீவில் உள்ள பிரதமர் அங்கிருந்து…
சென்னை : அன்புமணியின் நடைப்பயணத்துக்கு தடை விதித்து டிஜிபி உத்தரவிட்ட நிலையில், அனுமதி கோரி இன்று சென்னை உயர் நீதிமன்றத்தை…