ஸ்டீபன் ஃப்ளெமிங்கை குறி வைக்கும் பிசிசிஐ ? அப்போ அடுத்த பயிற்சியாளர் இவர் தானா ?

Published by
அகில் R

சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் ட்ராவிடுக்கு அடுத்த படியாக ஸ்டீபன் ஃப்ளெமிங்கை செயலாற்ற வைக்க பிசிசிஐ திட்டம் தீட்டுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக தற்போது செயல்பட்டு வரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான ராகுல் டிராவிடின் பதவிக்காலமானது இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருடன் முடிவுக்கு வருகிறது. அதன்பிறகு புதிய தலைமை பயிற்சியாளரை செயலாற்ற வைக்க பிசிசிஐ திட்டம் வகுத்து வந்த நிலையில் புதிய பயிற்சியாளருக்கான தேடலில் இருந்து வருகிறது. அந்த பதவிக்கான தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஏற்கனவே பிசிசிஐ X தளத்தில் அறிவித்திருந்தது.

மேலும், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக தொடர்ந்து பணியாற்ற ராகுல் டிராவிட்டும் பெரிதாக விருப்பம் தெரிவிக்காத நிலையில் இந்த தேடலில் சர்வேதச கிரிக்கெட் போட்டிகள் விளையாடும் உலக நாடுகளிலிருந்த்து பல நிபந்தனைகளுடன் திறமையான தகுதியுள்ள ஒருவரை தேர்வு செய்ய பிசிசிஐ எதிர்ப்பார்க்கிறது. இந்நிலையில், பிசிசிஐ புதிய திட்டம் ஒன்றை கையில் எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிகிறது.

அது என்னவென்றால் ஐபிஎல் தொடரில் ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்ற பயிற்சியாளரான சிஎஸ்கே அணியின் தலைமைபயிற்சியாளராக பணியாற்றி வரும் ஸ்டீபன் பிளெமிங்கை இந்திய கிரிக்கெட் அணிக்கு தலைமை பயிற்சியாளராக நியமிக்கும் எண்ணத்தில் பிசிசிஐ பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஐபிஎல் தொடர் ஆரம்பித்தது முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றி வரும் ஸ்டீபன் பிளெமிங் வெற்றிகரமான பயிற்சியாளரான ஐபிஎல் தொடரில் பணியாற்றி வருகிறார். மேலும், சிஎஸ்கே அணியை வைத்து 5 முறை ஐபிஎல் கோப்பையையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவரிடம் பிசிசிஐ பேச்சு வார்த்தை நடத்த முற்படுவதாக கிரிக்கெட் வட்டாரங்களில் சில தகவல்கள் வெளியாகி வருகிறது.

ஆனால், அவர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றுவதற்கு விருப்பம் தெரிவிக்காததாகவும், அந்த பேச்சு வார்த்தைக்கு அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை எனவும், இந்த சலுகையை அவர் ஏற்க மாட்டார் எனவும் வெளியான தகவல்கள் மூலம் தெரிகிறது. மேலும், அவர் இந்திய அணிக்கு பணியாற்றுவது அவரது விருப்பம் என்பதால் பிசிசிஐயும் அவரை வற்புறுத்தாது எனவும் தெரிகிறது.

Published by
அகில் R

Recent Posts

தடை செய்தாலும் மீண்டும் வருவோம்.! பெயரை மாற்றி சேவையை தொடரும் ரேபிடோ – உபர்.!

கர்நாடகா : போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெங்களூரு உட்பட, இந்தியாவின் முக்கிய நகரங்களில் விரைவான மற்றும் மலிவு விலையில் பைக்…

2 hours ago

”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!

டெல் அவிவ்: இஸ்ரேல், ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது…

2 hours ago

அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!

சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகன் ராஜாவை ரூ.17 கோடி பண மோசடி வழக்கில் சென்னை மத்திய…

4 hours ago

”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!

சென்னை : நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது.…

5 hours ago

ஆளுநர் விருதுகள்: சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு 2 பிரிவுகளில் விண்ணப்பிக்கலாம்.!

சென்னை : தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் சார்பாக, ''ஆளுநர் விருதுகள்'' 2025 ஆம் ஆண்டிற்கான ஆளுநர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது சமூக…

5 hours ago

அகமதாபாத் விமான விபத்து: மருத்துவ விடுதியில் மாணவர்கள் உயிர் தப்பிய காட்சி.!

குஜராத் : குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஜூன் 12 அன்று விபத்துக்குள்ளானது. இந்த…

5 hours ago