R Ashwin [Image source : AP]
ஓவல் மைதானத்தில் புல் வளர்ந்து இருப்பதால் சுழற்பந்துவீச்சு எடுபடாது என கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
இன்று பிற்பகல் லண்டன் ஓவல் மைதானத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டி துவங்க உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் முதல் இரன்டு இடங்களை பெற்றுள்ள இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இந்த போட்டியில் மோத உள்ளன.
இதற்கான தீவிர பயிற்சியில் இரு அணி வீரர்களும் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த டெஸ்ட் சாம்பியன் கிரிக்கெட் போட்டி குறித்து தனது கணிப்பை இந்திய கிரிக்கெட் அணி வீரர் தினேஷ் கார்த்திக் வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் கூறுகையில், ஓவல் மைதானத்தில் 6 மிமீ அளவுக்கு புற்கள் வளர்ந்து உள்ளது. அதனால் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வினுக்கு இந்த போட்டியில் வாய்ப்பு கிடைபப்து கடினம். புற்கள் அளவு அதிகமாக இருப்பதால் சுழற்பந்து எடுபடாது. அதனால் வேகப்பந்து வீச்சாளர்களான முகமது சமி, சிராஜ், ஷரதுல் தாகூர் , உமேஷ் யாதவ் என 4 வீரர்களுக்கும் வாய்ப்பு இருக்கும் என தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில், விராட் கோலி, சுப்மன் கில், புஜாரா, கே.எஸ்.பரத், இஷான் கிஷன், ரஹானே, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாக்குர், உனத்கட், முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் டெஸ்டில் களமிறங்கும் 11 பேர் கொண்ட அணி வீர்கள் பட்டியல் டாஸ் சமயத்தில் வெளியிடப்படும்.
சென்னை : மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் பரப்புரை மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு…
சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய குரூப்-4 தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் என்று…
பீகார் : இந்த ஆண்டு பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர்தலுக்கு முன்னதாக நிதிஷ் அரசு…
டெல்லி : கடந்த மாதம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. அது போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம். அதில்…
நெல்லை : 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில்,…
லண்டன் : 'ஹாரி பாட்டர்' படத் தொடரில் ஹெர்மியோன் கிரேன்ஜர் வேடத்தில் நடித்து பிரபலமான ஹாலிவுட் நடிகை எம்மா வாட்சன்…