MS Dhoni [Image source : PTI]
ஐபிஎல் இறுதிப்போட்டி ரிசர்வ் டே போல ஏற்கனவே 2019 அரையிறுதி போட்டியே தோனி விளையாடிய கடைசி போட்டி.
நேற்று நடைபெற வேண்டிய ஐபிஎல் இறுதி போட்டியானது மழை குறுக்கிட்ட காரணத்தால் இன்று நடைபெற உள்ளது. இன்று குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத், அகமதாபாத் – நரேந்திர மோடி மைதானத்தில் மோதவுள்ளது.
ஐபிஎல் வரலாற்றில் ரிசர்வ் டே எனப்படும் குறிப்பிட்ட தேதிக்கு அடுத்த நாள் இறுதி போட்டி நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். ஆனால், சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு இது மாதிரியான சம்பவம் ஏற்கனவே நடைபெற்றுள்ளது. அதனை பகிர்ந்து ரசிகர்கள் கொஞ்சம் கலக்கத்தில் இருக்கின்றனர்.
அதாவது 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் போது நியூசிலாந்து அணியுடன் அரையிறுதி போட்டி விளையாடுகையில், மழை குறுக்கிட்ட காரணத்தால் அந்த போட்டி அடுத்த நாள் நடைபெற்றது. அந்த போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது. மேலும் அதுதான் இந்திய அணிக்காக தோனி விளையாடிய கடைசி போட்டியாகும்.
இதனை குறிப்பிட்டு, மீண்டும் அதே ரிசர்வ் டேயில் தோனி விளையாடுகிறார். ஒருவேளை 2019 உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டம் போல மீண்டும் நடந்து விடுமோ என சிஎஸ்கே மற்றும் தோனி ரசிகர்கள் கலக்கத்தில் இருக்கின்றனர்.
சென்னை : மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் பரப்புரை மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு…
சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய குரூப்-4 தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் என்று…
பீகார் : இந்த ஆண்டு பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர்தலுக்கு முன்னதாக நிதிஷ் அரசு…
டெல்லி : கடந்த மாதம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. அது போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம். அதில்…
நெல்லை : 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில்,…
லண்டன் : 'ஹாரி பாட்டர்' படத் தொடரில் ஹெர்மியோன் கிரேன்ஜர் வேடத்தில் நடித்து பிரபலமான ஹாலிவுட் நடிகை எம்மா வாட்சன்…