அவரது ஆட்டம் எங்களை வழி வகுக்கிறது – வெற்றி குறித்து டூ பிளெஸ்ஸிஸ்.!

Published by
கெளதம்

IPL 2024 : விராட் கோலியின் பேட்டிங் குறித்து RCB கேப்டன் டூ பிளெஸ்ஸிஸ் பாராட்டி உள்ளார்.

ஐபிஎல் தொடரின் 6-வது போட்டியாக நேற்றைய தினம் பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பெங்களூரு அணியும், பஞ்சாப் அணியும் மோதியது. முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 175 ரன்கள் எடுத்தது.

176 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய பெங்களூரு அணிக்கு கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது களத்தில் இருந்த தினேஷ் கார்த்திக், முதல் பந்தில் 6 ரன்களும், அடுத்த பந்தில் 4 ரன்களை அடித்து வெற்றி தேடித் தந்தார்.

இதன் மூலம், 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றிபெற்றது. முதல் போட்டியில் சென்னை அணியிடம் தோல்வி அடைந்த நிலையில், பஞ்சாப் அணிக்கு எதிராக நேற்று பெங்களூர் அணி வெற்றிபெற்று இந்த சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்தது.

போட்டி முடிந்த பின், பெங்களூர் அணி கேப்டன் ஃபாஃப் டூ பிளெஸ்ஸிஸ் வெற்றி பெற்ற தருணத்தை பகிர்ந்து கொண்டார். கோலியின் மேட்ச்-வின்னிங் நாக் மற்றும் களத்தில் அவரது உணர்ச்சிமிக்க விளையாட்டை பாராட்டினார்.

“இன்று விளையாடிய பிட்ச்சானது சற்று சவாலாக இருந்தது, அது வழக்கம் போல பேட்டிங் பிட்சாக இல்லை . அதிலும், விராட் தனது விளையாட்டை மேலும் மேம்படுத்தி உள்ளார். அவர் விளையாடுவதை பார்க்க நன்றாக இருக்கிறது. அவர், இது போன்ற சாவல்கள் நிறைந்த கிரிக்கெட் விளையாடுவதில் மிகவும் ஆர்வமாக இருக்கிறார்” என கூறினார்.

Recent Posts

தேர்வர்கள் கவனத்திற்கு: குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு.!

சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…

23 minutes ago

அஜித்குமார் மீது புகார் கூறிய நிகிதா மீது பணமோசடி வழக்கு.! உடனே தலைமறைவு?

சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…

53 minutes ago

ரஷ்யாவிடம் எரிபொருள் வாங்கும் இந்தியா, சீனா மீது அமெரிக்கா 500% வரி? – செனட் மசோதாவுக்கு ஒப்புதல்.!

வாஷிங்டன் : ரஷ்யாவுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு, 500 சதவிகிதம் வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.…

1 hour ago

உயரும் Ola, Uber கட்டணம்.., புதிய விதிகள் என்ன.? மத்திய நெடுஞ்சாலைத் துறை அறிவிப்பு.!

டெல்லி : ஓலா, உபர் போன்ற டாக்ஸி நிறுவனங்கள் "Peak hours" நேரங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க மத்திய அரசு…

2 hours ago

அஜித் சம்பவம் போல் மற்றொரு அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்.., இளைஞரை சரமாரியாக தாக்கிய போலீசார்.!

தேனி : சிவகங்கை இளைஞர் அஜித்குமாரை போலீசார் அடித்து கொலை செய்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் நிலையில், அதேபோல்…

2 hours ago

“ChatGPT-ஐ அதிகம் நம்ப வேண்டாம், இந்த உண்மையைச் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்” – சாம் ஆல்ட்மன்.!

வாஷிங்டன் : ஓபன் ஏ.ஐ. தலைவர் சாம் ஆல்ட்மன், ''சாட்ஜிபிடி-யை மக்கள் அதிகம் நம்புவதாகவும், ஆனால் செயற்கை நுண்ணறிவு (AI)…

2 hours ago