இந்திய முன்னாள் வீரர் டேவிட் ஜான்சன் காலமானார் ..! ஜெய்ஷா, கம்பிர் இரங்கல்!!

Published by
அகில் R

டேவிட் ஜான்சன்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேக பந்து வீச்சாளரான டேவிட் ஜான்சன் இன்று தனது அடுக்குமாடி குடியிருப்புக்கு வெளியே இறந்து கிடந்ததாக உள்ளூர் போலீசார் தரப்பில் தெரிவிக்கின்றனர். இதனால், இவர் கொத்தனூர் கனக ஸ்ரீ லே அவுட்டில் உள்ள வீட்டில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

மேலும், இது குறித்தது அதிகாரிகள் மேற்கொண்டு விசாரணைகளையும் நடத்தி வருகின்றன.  டேவிட் ஜான்சன் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிவர் ஆவார்.  கடந்த 1996 ம் ஆண்டில் இந்தியாவுக்காக, ஆஸ்திரேலியா அணியை எதிர்த்து 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார். அந்த போட்டியிலும் இவர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

1995-96 ரஞ்சி டிராபி சீசனில் அவரது சிறப்பான சாதனை ஒன்று தான், கேரளாவுக்கு எதிராக 152 ரன்கள் விட்டு கொடுத்து 10 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். இதன் மூலம் தான் இவருக்கு இந்திய அணியில் வாய்ப்பும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது மரணம் கிரிக்கெட் வட்டாரங்களில் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளரான ஜெய்ஷா அவரது எஸ் தளத்தில் தனது இரங்கலை தெரிவித்து இருந்தார். அவர், “நமது முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளரான டேவிட் ஜான்சனின் குடும்பத்தினருக்கும், அவரது நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்.

கிரிக்கெட் விளையாட்டில் அவர் ஆற்றிய பங்களிப்பு எப்போதும் நினைவுகூரப்படும்” என பதிவிட்டிருந்தார். மேலும், இந்தியா அணியின் முன்னாள் பேட்ஸ்மேனான கம்பிரும் இரங்கலை தனது X தளத்தில் தெரிய்வித்திருந்தார். அவர், “டேவிட் ஜான்சனின் மறைவு வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும், அன்பானவர்களுக்கும் கடவுள் பலம் தரட்டும்” என பதிவிட்டு இரங்கலை தெரிவித்து இருந்தார்.

Published by
அகில் R

Recent Posts

இந்தியா போட்டியை நீங்க பாத்துக்கோங்க…நான் BBL போறேன்! இங்கிலாந்துக்கு டாடா சொன்ன ஆர்ச்சர்!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது. இந்த தொடரின்…

25 minutes ago

அடுத்தடுத்து கோளாறாகும் ஏர் இந்தியா விமானங்கள்? பதற்றத்தில் பயணிகள்!

கொல்கத்தா : ஏர் இந்தியா விமானங்களில் அடுத்தடுத்து தொழில்நுட்பக் கோளாறுகள் கண்டறியப்பட்டு வருவதால் பயணிகள் மிகவும் அதிர்ச்சியடைந்து இனிமேல் விமானத்தில்…

59 minutes ago

டெஹ்ரானில் இருந்து உடனடியாக அனைவரும் வெளியேறுங்கள்! அலர்ட் கொடுத்த டொனால்ட் டிரம்ப்!

இஸ்ரேல் : ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் தொடர் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட்…

1 hour ago

இன்று இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

சென்னை : வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக…

2 hours ago

ஈரான் அரசு தொலைக்காட்சி அலுவலகத்தை நொறுக்கிய இஸ்ரேல்.! தாக்குதலின் நேரடியாக ஒளிபரப்பு காட்சி..,

இஸ்ரேல் : ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஈரானின் அரசு…

11 hours ago

மதிமுக அலுவலகத்தில் அடையாளம் தெரியாத நபர் கல் வீச்சு தாக்கியதால் பரபரப்பு.!

சென்னை : சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தின் மீது, இன்று அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தாக்குதல்…

11 hours ago