இந்த யோசனை எனக்கு வரவில்லை..! நடராஜன் மைதான திறப்பு விழாவில் தினேஷ் கார்த்திக் நெகிழ்ச்சி.!

Published by
செந்தில்குமார்

நடராஜன் கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்த தினேஷ் கார்த்திக், கிரிக்கெட் மைதானத்தை கட்டும் யோசனை எனக்கு வரவில்லை என்று நெகிழ்ச்சியாக கூறினார்.

இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் தன்னுடைய சொந்த ஊரான சேலம் அருகே உள்ள சின்னப்பம்பட்டி கிராமத்தில் கிரிக்கெட் மைதானம் ஒன்றை சொந்தமாக கட்டியுள்ளார். இந்த மைதானத்தின் திறப்பு விழாவிற்கு தினேஷ் கார்த்திக், விஜய் டிவி புகழ், யோகி பாபு உள்ளிட்ட பலரும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

இந்த நடராஜன் கிரிக்கெட் மைதானத்தின் திறப்பு விழா ஜூன் 23ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், நடராஜன் கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்தார்.

மைதானத்தை திறந்து வைத்த பின் பேசிய அவர், நான் இந்த விழாவிற்கு வந்துள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நடராஜன் திறமையால் தமிழக அளவிளான போட்டிகளில் விளையாடி, அங்கிருந்து ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாடி, இன்று இந்த மைதானத்தை கட்டியுள்ளார்.

எனக்கு அவரிடம் பிடித்தது, அவர் வாழ்வில் முன்னேற உதவியாய் இருந்தவர்களை இன்று வரை மறக்காமல் அவர்கள் மீது மரியாதை வைத்திருக்கிறார். பல ஊர்களில் இருந்து நிறைய பேர் கிரிக்கெட் விளையாடியிருக்கிறார்கள். ஆனால், ஒரு மைதானத்தைக் கட்டி தனது ஊரில் இருப்பவர்களும் கிரிக்கெட் விளையாடுவதற்கு வர வேண்டும் என்று யோசித்தது மிகப் பெரிய விஷயம்.

அதை நடராஜன் நிஜமாக்கி காட்டியிருக்கிறார். நானும் கிரிக்கெட் விளையாடியிருக்கிறேன். ஆனால், ஒரு கிரிக்கெட் மைதானத்தை கட்டும் யோசனை எனக்கு வந்தது இல்லை என்று இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

“நான் எப்பவும் மக்களுடன்தான் பயணிக்கிறேன், நான்தான் முதலமைச்சர் வேட்பாளர்” – இபிஎஸ்.!

சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…

10 minutes ago

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு .!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…

28 minutes ago

பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நினைவு தின பேரணி!

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…

52 minutes ago

உக்ரைன் மீது ரஷ்யா மிகப் பெரிய தாக்குதல் வான்வழித் தாக்குதல்.!

கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…

1 hour ago

இங்கிலாந்து அணி ஆல் அவுட்.., 3ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 244 ரன்கள் முன்னிலை.!

பர்மிங்காம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி…

2 hours ago

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

15 hours ago