இந்த யோசனை எனக்கு வரவில்லை..! நடராஜன் மைதான திறப்பு விழாவில் தினேஷ் கார்த்திக் நெகிழ்ச்சி.!

Published by
செந்தில்குமார்

நடராஜன் கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்த தினேஷ் கார்த்திக், கிரிக்கெட் மைதானத்தை கட்டும் யோசனை எனக்கு வரவில்லை என்று நெகிழ்ச்சியாக கூறினார்.

இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் தன்னுடைய சொந்த ஊரான சேலம் அருகே உள்ள சின்னப்பம்பட்டி கிராமத்தில் கிரிக்கெட் மைதானம் ஒன்றை சொந்தமாக கட்டியுள்ளார். இந்த மைதானத்தின் திறப்பு விழாவிற்கு தினேஷ் கார்த்திக், விஜய் டிவி புகழ், யோகி பாபு உள்ளிட்ட பலரும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

இந்த நடராஜன் கிரிக்கெட் மைதானத்தின் திறப்பு விழா ஜூன் 23ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், நடராஜன் கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்தார்.

மைதானத்தை திறந்து வைத்த பின் பேசிய அவர், நான் இந்த விழாவிற்கு வந்துள்ளது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நடராஜன் திறமையால் தமிழக அளவிளான போட்டிகளில் விளையாடி, அங்கிருந்து ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாடி, இன்று இந்த மைதானத்தை கட்டியுள்ளார்.

எனக்கு அவரிடம் பிடித்தது, அவர் வாழ்வில் முன்னேற உதவியாய் இருந்தவர்களை இன்று வரை மறக்காமல் அவர்கள் மீது மரியாதை வைத்திருக்கிறார். பல ஊர்களில் இருந்து நிறைய பேர் கிரிக்கெட் விளையாடியிருக்கிறார்கள். ஆனால், ஒரு மைதானத்தைக் கட்டி தனது ஊரில் இருப்பவர்களும் கிரிக்கெட் விளையாடுவதற்கு வர வேண்டும் என்று யோசித்தது மிகப் பெரிய விஷயம்.

அதை நடராஜன் நிஜமாக்கி காட்டியிருக்கிறார். நானும் கிரிக்கெட் விளையாடியிருக்கிறேன். ஆனால், ஒரு கிரிக்கெட் மைதானத்தை கட்டும் யோசனை எனக்கு வந்தது இல்லை என்று இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

ஹிட் மேன் ஹாப்பி அன்னாச்சி…, வான்கடேவில் ரோஹித் சர்மா பெயரில் ஸ்டாண்ட்..!

மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…

11 hours ago

மாமனாக வென்றாரா நடிகர் சூரி.? ட்விட்டர் விமர்சனம் இதோ.!

சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…

11 hours ago

”மாமன்” திரைப்படம் ரிலீஸ்: மண் சோறு சாப்பிட்ட மதுரை ரசிகர்கள் குறித்து சூரி வேதனை.!

சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…

13 hours ago

போர் பதற்றமா இருக்கு நான் வரல…ஐபிஎல் தொடருக்கு டாட்டா காட்டிய மிட்செல் ஸ்டார்க்?

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…

14 hours ago

இன்று 9, நாளை 13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…

15 hours ago

ஐபிஎல் போட்டி நாளை தொடக்கம்.! பெங்களூரு மழை ஆட்டத்தை கெடுக்குமா?

பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…

15 hours ago