Jadeja [file image]
ஐபிஎல் 2024 : நேற்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி சென்னை அணி வெற்றி பெற்றதை தொடர்ந்து ரவீந்திர ஜடேஜா பேசி இருந்தார்.
நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் சென்னை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய பங்காக ஜடேஜா தனது பந்து வீச்சின் மூலம் கொடுத்திருந்தார்.
இதனால் நேற்றைய போட்டியில் ஆட்டநாயகன் விருதையும் அவர் வென்றிருந்தார். அதை தொடர்ந்து போட்டி முடிந்த ஆட்டநாயகன் விருதை பெற்ற பிறகு அவர் பேசி இருந்தார். அவர் பேசுகையில், “நான் எப்போதும் இந்த மைதானத்தில் பந்து வீசும் போது அந்த நேரங்களை ரசிக்கிறேன், இதனால் மேலும் பந்து வீச விரும்புவேன். பேட்ஸ்மேன்களுக்கு கடினமான பந்துகளை வீசுவதே எனது திட்டமாக இருந்தது.
நான் இங்கு நிறைய பயிற்சி செய்துள்ளேன், இந்த பிட்சில் நீங்கள் நல்ல இடங்களில் பந்துவீசினால் அது நிச்சயமாக உங்களுக்கு உதவும். மேலும், இந்த மைதானத்தில் புதிதாக வருகை தரும் அணிகள் பிட்சின் போக்கை கணிக்க சிறுது நேரம் எடுப்பார்கள். அதுதான் உங்களுக்கான நேரம்.
அதே போல தான் இன்றும் நடந்தது அந்த நேரத்தை பயன்படுத்தி நீங்கள் புதிதாக திட்டமிட்டு அவர்களை இந்த சூழ்நிலைக்கு திரும்பி விளையாடாதவாறு நீங்கள் பந்து வீச வேண்டும். அதை தான் இன்று நான் செய்தேன்”, என்று ஆட்டநாயகன் விருது பெற்ற பிறகு ரவீந்திர ஜடேஜா பேசி இருந்தார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…