சுனில் நரேன் செய்த சம்பவம் !! ஐபிஎல்லில் வரலாற்றில் புதிய சாதனை !!

Published by
அகில் R

ஐபிஎல் 2024 : நேற்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணியின் ஆல்-ரவுண்டர் ஆன சுனில் நரேன் ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளார்.

நேற்று ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் கொல்கத்தா அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.  தொடக்க வீரரான சுனில் நரேன் தனி ஒருவராக  அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் வெறும் 56 பந்துகளில் 109 ரன்கள் எடுத்திருந்தார் அதில்  13 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் அடங்கும்.

இவரது அதிரடி சதத்தால் கொல்கத்தா அணி 224 என்ற இமாலய இலக்கை ராஜஸ்தான் அணிக்கு நிர்ணயித்தது. மேலும், சுனில் நரேன் பந்து வீச்சிலும் சிறப்பாக செயல்பட்டு விக்கெட்டுகளையும் எடுத்திருந்தார். அவர் 4 ஓவர் பந்து வீசி 30 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகள் கைப்பற்றி இருந்தார். சுனில் நரேன், துருவ் ஜுரேல் மற்றும் ஆக்ரோஷமாக சிக்ஸர்கள் விளாசி கொண்டிருந்த ரோவ்மேன் போவெல் போன்ற ராஜஸ்தான் அணியின் முக்கிய விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.

மேலும், ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஆன சஞ்சு சாம்சன், ஹர்ஷித் ராணா பந்து வீச்சில் இதே சுனில் நரேனிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்து இருப்பார். இதன் மூலம் ஒரு வீரராக சுனில் நரேன் ஐபிஎல் தொடரில் புதிய சாதனையை நிகழ்த்தி உள்ளார். அதாவது ஒரு வீரராக விளையாடிய ஒரே போட்டியில் சதம் விளாசியதுடன், 2 விக்கெட்டுகள் கைப்பற்றி மேலும் ஒரு கேட்ச்சையும் பிடித்துள்ளார்.

இதனால் இது புதிய ஐபிஎல் சாதனையாக ஐபிஎல் தொடரில் பதிவாகி உள்ளது. நேற்றைய போட்டியில் ஒரு வேளை கொல்கத்தா அணி வெற்றி பெற்றிருந்தால் சுனில் நரேன் ஆட்டநாயகன் விருதை பெற்றுருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், ஜோஸ் பட்லரின் அதிரடி ஆட்டத்தால் இறுதியில் த்ரில் வெற்றியை ராஜஸ்தான் அணி பதிவு செய்ததோடு ஆட்டநாயகன் விருதாயு பட்லர் தட்டி சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

9 hours ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

9 hours ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

10 hours ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

10 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

12 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

13 hours ago