ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான ஒருநாள் போட்டி, சிட்னியில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த போட்டியின் இந்திய அணி பேட்டிங் செய்யும் போது 20 ஆம் ஓவரில் ஒரு தரமான சம்பவம் நடந்தது.
அப்பொழுது கோலி – ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் செய்து வந்த நிலையில், போட்டியை காணவந்த இந்திய ஜெர்சி அணிந்து வந்த ரசிகர் ஒருவர், ஆஸ்திரேலியா ஜெர்சி அணிந்து வந்த பெண்ணிடம் வித்தியாசமாக தந்து காதலை தெரிவித்துள்ளார். மைதானத்தில் அதனை பேருக்கும் முன்னாள் அந்த இந்திய ரசிகர், தனது ஆஸ்திரேலியா காதலியிடம் தனது காதலை கூறியுள்ளார். கூட்டத்திற்கு மத்தியில் தனது காதலை கூறியதால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், அவரின் காதலை ஏற்றுக்கொண்டார்.
பின்னர் இருவரும் கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்து தங்களின் அன்பை பகிர்ந்துகொண்டனர். அவர்களை சுற்றியிருந்த இதர ரசிகர்கள், அவர்களை வாழ்த்தினார்கள். இந்த சம்பவத்தை பார்த்த ஆஸ்திரேலிய அணி வீரர் மேக்ஸ்வெல், அவர்களை பார்த்து கைதட்டி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்ற நிலையில், காதலுக்கு இனமோ, அழகோ முக்கியமில்லை என தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.
மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…
சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…
சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…