10 ஆண்டுகளுக்கு பிறகு தரம்ஷாலாவில் ஐபிஎல் போட்டி…பஞ்சாப் – டெல்லி அணிகள் மோதல்.!!

Published by
பால முருகன்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் 10 ஆண்டுகள் பிறகு தரம்ஷாலாவில் இன்று  நடைபெறவுள்ளது. 

தர்மஷாலாவில் உள்ள ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்கம் (HPCA) மைதானத்தில் ஐபிஎல் போட்டி (மே 17) இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. பஞ்சாப் கிங்ஸ் இந்த சீசனின் 6-வது வெற்றியைப் பதிவுசெய்து பிளே ஆப் சுற்றுக்குள் நுழைய வேண்டும் நம்பிக்கையுடன் இந்த ஆட்டத்தில் களமிறங்குகிறது.

அதே நேரத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் இதுவரை 8-போட்டிகளில் தோல்வியடைந்த நிலையில், இந்த சீசனில் கிட்டத்தட்ட வெளியேறிவிட்டது என்றே கூறலாம். இன்றைய போட்டியில் டெல்லி வெற்றிபெற்றால் பஞ்சாப் அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு கேள்வி குறி ஆகிவிடும்.

மேலும், இந்த இரண்டு அணிகளும் கடைசியாக சந்தித்தபோது, ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. மேலும், இந்த மைதானம் பஞ்சாப் அணி வீரர்களுக்கு பிடித்த மைதானம் என்பதால் பஞ்சாப் அணி அதிரடியாக விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மைதானத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்பு பூஜ்ஜியத்தில் உள்ளது என்பதால்  போட்டி தடையின்றி நடைபெறும் என எதிர்பார்க்கலாம். மேலும், 10 ஆண்டுகளுக்கு பிறகு தரம்ஷாலாவில் ஐபிஎல் போட்டி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

ஜடேஜா வாஷிங்டனை சதம் அடிக்க விடாமல் அவுட் ஆக்கியிருக்கணும்..! நாதன் லயன் பேச்சு!

லண்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இரண்டு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடி வருகிறது.…

16 minutes ago

ரஷ்யா நிலநடுக்கம் : ஹவாய் தீவில் சுனாமி தாக்குதல்..துறைமுகம் மூடல்!

கம்சாட்கா : ரஷ்யாவின் கம்சாட்கா தீபகற்பத்திற்கு அருகே இன்று (ஜூலை 30, 2025) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில்…

1 hour ago

தமிழ்நாட்டில் 1967, 1977 போன்று 2026 தேர்தல்..த.வெ.க தலைவர் விஜய் ஸ்பீச்!

சென்னை : பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று அக்கட்சி தலைவர் ,விஜய் தலைமையில் வெற்றிபேரணியில்…

2 hours ago

வெற்றி பேரணியில் தமிழ்நாடு… தவெக உறுப்பினர் சேர்க்கை செயலியை அறிமுகப்படுத்திய விஜய்!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் நடிகர் விஜய், சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில்…

2 hours ago

அதிமுகவின் போராட்டத்தால் அஜித்குமார் வழக்கை சிபிஐயிடம் ஒப்படைத்தது திமுக அரசு – எடப்பாடி பழனிசாமி பேச்சு!

திருவாரூர் : அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, மடப்புரம் அஜித்குமார் (26) கொலை…

3 hours ago

“இந்தியா மீது 20-25% வரை வரி விதிப்பு”…அமெரிக்க அதிபர் டிரம்ப் சூசகம்!

வாஷிங்டன் : ஜூலை 30, 2025: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 20…

5 hours ago