IPL ClosingCeremony [FileImage]
ஐபிஎல் 2023 தொடரின் இறுதிப்போட்டியில் நடைபெறும் நிறைவு விழாவில் ராப்பர் கிங், டிஜே நியூக்லியா, டிவைன் மற்றும் ஜோனிதா காந்தி கலந்து கொள்கிறார்கள்…
இந்தியன் பிரீமியர் லீக் 2023 தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இன்னும் இரண்டு போட்டிகள் மட்டுமே மீதமுள்ள நிலையில் நடப்பு ஐபிஎல் தொடர் முடிவடையவிருக்கிறது. பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி வரும் மே 28 ஆம் தேதி குஜராத் அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
குவாலிஃபையர் 1ல் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது, ஆனால் நடப்பு சாம்பியனான குஜராத் அணிக்கு மற்றொரு வாய்ப்பான இன்று குவாலிஃபையர் 2ல் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) வரலாற்றில் இரண்டு அணிகள் மட்டுமே தொடர்ச்சியாக இரண்டு முறை பட்டத்தை வென்றுள்ளன. அந்த அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. மற்றொரு அணியான மும்பை இந்தியன்ஸ், இன்று குவாலிஃபையர் 2ல் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதுகிறது.
இந்த ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி நிறைவு விழா, தொடக்க விழா போன்றே பிரமாண்டமாக கொண்டாடப்பட இருக்கிறது. இதில் உலக பிரபல நட்சத்திரங்கள் கலந்து கொள்கின்றனர். இதனை ஐபிஎல் நிர்வாகம் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை ஐபிஎல் 2023 நிறைவு விழாவில் பிரபல ராப்பர் கிங் மற்றும் டிஜே நியூக்லியா ஆகியோரும், பாடகர்கள் டிவைன் மற்றும் ஜோனிதா காந்தி ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கின்றனர்.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எலான் மஸ்க் புதிதாக தொடங்கிய ‘அமெரிக்கா கட்சி’ (America Party) குறித்து…
டெலவேர் : அமெரிக்காவின் டெலவேர் மாகாணத்தைச் சேர்ந்த 35 வயது ஜெனிபர் ஆலன், ChatGPT-யின் வழிகாட்டுதலுடன் ஒரே மாதத்தில் ரூ.10…
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக சமீபத்தில் அறிவித்திருந்தது. எனவே, இது குறித்து அரசியல்…
வாஷிங்டன் : டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடனான மோதலைத் தொடர்ந்து, நேற்றைய தினம் ''அமெரிக்கா…
வாசிங்டன் : பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் நாடுகள், அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடாமல், ஈரான் மீதான சமீபத்திய…
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை அருகே உள்ள குடியிருப்புப் பகுதியின் அருகில் உள்ள ஓடையில் பதுங்கியிருந்த 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை…