MSdhoni RetirementIPL [Image - Twitter/@IPL]
வெற்றிக்கு பிறகு தோனி, ஓய்வு முடிவு குறித்து உடல் ஒத்துழைத்தால் ரசிகர்களுக்காக இன்னும் ஒரு சீசன் விளையாடுவேன் என கூறியுள்ளார்.
மழைக்கு பிறகு நேற்று ரிசர்வ் டே-யில் குஜராத் நரேந்திரமோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி ஐபிஎல் வரலாற்றில் 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. குஜராத் அணி முதலில் பேட் செய்து 20 ஒவர்களில் 214 ரன்கள் குவித்தது. அதன்பிறகு சென்னை அணி பேட் செய்ய வரும் போது மழை குறுக்கிட்டு ஆட்டம் நள்ளிரவு 12.10 க்கு மீண்டும் தொடங்கியது.
ஆட்டம் 15 ஓவர்களாக குறைக்கப்பட்டு டக்வர்த் லூயிஸ் விதிப்படி சென்னை அணிக்கு 171 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. சென்னை அணி வெற்றிக்காக குறிப்பாக கேப்டன் தோனிக்காக அணியின் வீரர்கள் கடுமையாக போராடினர் என்றே கூறலாம். தோனிக்கு இது கடைசி ஐபிஎல் ஆக இருக்கும் பட்சத்தில் அவருக்கு கோப்பையை பரிசாக அளிக்க வேண்டும் என அணியின் வீரர்கள் குஜராத்தின் பந்துவீச்சு சவால்களை சமாளித்து 5-வது முறையாக வெற்றி கோப்பையை வென்றெடுத்தனர்.
வெற்றிக்கு பிறகு பேசிய தோனி, ஓய்வு பெற இது தான் சரியான தருணமாக இருக்கிறது. அப்படி எல்லாருக்கும் நன்றி கூறிவிட்டு எளிதாக ஓய்வு பெற முடியும், ஆனால் ரசிகர்கள் எனக்கு காட்டிய அன்பு மிகவும் அளவு கடந்தது. நான் எங்கு சென்றாலும், எந்த மைதானத்தில் சென்று விளையாடினாலும் என் மீது அவர்கள் செலுத்தும் அன்புக்கு எல்லையில்லை.
ஆனால் கடினமான ஒன்று என்னவென்றால் இன்னும் 9 மாதங்கள் தீவிரமாக பயிற்சி செய்து அடுத்த ஒரு ஐபிஎல் சீசன் விளையாடுவது தான். எது எப்படியிருந்தாலும் என் உடல் ஒத்துழைக்கவேண்டும். எனக்கு ஓய்வு குறித்து முடிவு செய்ய இன்னும் 6-7 மாதங்கள் இருக்கின்றன. அப்படி நான் அடுத்த ஐபிஎல் சீசன் விளையாடுவதாக இருந்தால் அது ரசிகர்களுக்கு நான் தரும் அன்பு பரிசாக இருக்கும். ஆனால் அது எளிதான ஒன்றாக இருக்கப்போவதில்லை.
எனக்கு அவர்கள் கொடுத்த அன்பு மற்றும் பாசத்திற்கு நான் எதாவது செய்யவேண்டும் என நினைக்கிறேன், அதற்கு அடுத்தவருட ஐபிஎல் தொடரில் நான் விளையாடி என்னிடம் இருந்து ரசிகர்களுக்கு நான் பரிசு கொடுக்க விரும்புகிறேன் என கூறியுள்ளார். இதனால் அடுத்த ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது, எனினும் தோனி விளையாடுவாரா இல்லையா என்பது குறித்து, அவர் கூறியது போல் இன்னும் 6-7 மாதங்கள் பொறுத்திருக்க வேண்டும்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…