Shubman Gill [Image Source : Twitter/@GT]
ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் அதுல் வாசன் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2023 தொடர் ஒருவழியாக இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. லீக் சுற்று மற்றும் பிளேஆப் சுற்று போட்டிகள் முடிவடைந்து இறுதி சுற்று போட்டி இன்று நடைபெறுகிறது. இன்று நடைபெறும் இறுதி போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மோதுகிறது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த இறுதிப் போட்டிக்கு முன்னதாக, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அதுல் வாசன், குஜராத் அணியின் தொடக்க வீரர் ஷுப்மான் கில்லை பாராட்டியுள்ளார். இந்த ஐபிஎல் தொடரில் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா அணியை சுப்மன் கில் அணிகளை வெற்றியை தொடர்ந்து கில்லின் அடுத்த இலக்கு தோனியின் சென்னை அணி தான் என்று கூறியுள்ளார்.
இந்த ஐபிஎல் தொடரில் சுப்மன் கில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு எதிராக விளையாடிய இரண்டு போட்டிகளில் சதங்கள் அடித்து வெற்றி பெற்றுள்ளார்.
இந்நிலையில், இந்த ஐபிஎல் தொடரில் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா அணியை சுப்மன் கில் சதமடித்து வெற்றி பெற்றது போல் இன்றைய போட்டியில் தோனியையும் வெல்வார் போல் தோன்றுகிறது என இந்திய அணியின் முன்னாள் வீரர் அதுல் வாசன் தனது கருத்தை முன் வைத்துள்ளார்.
நடப்பு சீசனில் கில் அடித்த 851 ரன்களில், 533 ரன்கள் அகமதாபாத்தில் நடந்து முடிந்த எட்டு போட்டிகளில் எடுத்தது. அதில் அவர் அடித்த மூன்று அரைசதங்கள் மற்றும் இரண்டு சதங்கள் அடங்கும்.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எலான் மஸ்க் புதிதாக தொடங்கிய ‘அமெரிக்கா கட்சி’ (America Party) குறித்து…
டெலவேர் : அமெரிக்காவின் டெலவேர் மாகாணத்தைச் சேர்ந்த 35 வயது ஜெனிபர் ஆலன், ChatGPT-யின் வழிகாட்டுதலுடன் ஒரே மாதத்தில் ரூ.10…
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக சமீபத்தில் அறிவித்திருந்தது. எனவே, இது குறித்து அரசியல்…
வாஷிங்டன் : டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடனான மோதலைத் தொடர்ந்து, நேற்றைய தினம் ''அமெரிக்கா…
வாசிங்டன் : பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் நாடுகள், அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடாமல், ஈரான் மீதான சமீபத்திய…
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை அருகே உள்ள குடியிருப்புப் பகுதியின் அருகில் உள்ள ஓடையில் பதுங்கியிருந்த 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை…