ரோஹித் சர்மாவுக்கு அது செட் ஆகாது…ராபின் உத்தப்பா ஓபன் டாக்.!!

Published by
பால முருகன்

நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா நல்ல தொடக்கங்களை பெரிய ஸ்கோராக மாற்ற போராடுகிறார், ஏனெனில்13 போட்டிகளில் ஒரு அரைசதத்துடன் 19.77 சராசரி மற்றும் 131.12 ஸ்ட்ரைக் ரேட் உடன் 257 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

இந்த சூழலில் முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர், ரோஹித் சர்மாவை ஐபிஎல் போட்டியிலிருந்து ஓய்வு எடுத்து, வரவிருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC 2023) இறுதிப் போட்டியில் கவனம் செலுத்துமாறு வலியுறுத்தினார்.

இந்த நிலையில், ரோஹித் சர்மாவின் பேட்டிங்கை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா, ரோஹித்துக்கு ஓய்வு தேவையில்லை என்று கூறினார். ஊடகத்திற்கு பேட்டியளித்த உத்தப்பா கூறியதாவது  “ரோஹித் சர்மாவின் பேட்டிங்கில் பெரிய தவறு இல்லை. அவர் கிரீஸில் பேட்டிங் செய்யும்போது, நாம் அனைவரும் அறிந்த ரோஹித் சர்மாவைப் போலவே தான் விளையாடுகிறார்.

ரோஹித் முதலில் சிறிது நேரம் எடுத்துக்கொண்டு, பின்னர் அதிரடியாக விளையாடுவது தான் அவருக்கு மிகவும் பொருத்தமானது. ஆக்ரோஷமான கிரிக்கெட்டை விளையாட முயற்சிக்கும் ரோஹித் சர்மா தேர்ந்தெடுத்த டெம்ப்ளேட் தான் தவறு. ஆக்ரோஷமான கிரிக்கெட் அவருக்கு செட் ஆகாது.

அவர் முயற்சித்த மற்றும் சோதிக்கப்பட்ட முறையில் அவர் வெற்றியடைந்தார் என்று நான் நினைக்கிறேன், அவர் மீண்டும் சரியான பேட்டிங்கிற்கு வந்தால், நாம் அனைவரும் அறிந்த ரோஹித் சர்மாவைப் போல் செயல்படுவார்” என கூறியுள்ளார். 

Published by
பால முருகன்

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

14 minutes ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

32 minutes ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

1 hour ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

2 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

3 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

4 hours ago