WTC இறுதிப் போட்டியை வெல்வது இந்தியா இல்லை, ஆஸ்திரேலியா தான்… வாசிம் அக்ரம்.!

Published by
Muthu Kumar

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெல்வதற்கு ஆஸ்திரேலியாவிற்கு  தான் அதிக வாய்ப்பு என வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நாளை மறுநாள் (ஜூன்-7 இல்) வரலாற்று சிறப்புமிக்க லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்காக இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணி வீரார்கள் தீவிர பயிற்சி செய்துவருகின்றனர். இரண்டாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இம்முறை டெஸ்ட் உலகக்கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்குகிறது.

முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் போட்டி குறித்த தனது கருத்துக்கணிப்பை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, டெஸ்ட் உலகக்கோப்பையை வெல்லும் அணியாக ஆஸ்திரேலியா தான் அதிக விருப்ப அணியாக இருப்பதாக கூறியுள்ளார். ஆடுகளம் வேகபந்து வீச்சுக்கு சாதகமாக இருப்பதால் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் சற்று தடுமாறக்கூடும்.

மேலும் பிட்ச் பவுன்ஸ்க்கு ஒத்துழைப்பதாகவும் இருப்பதால் இந்திய அணியினர் கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டியது அவசியமாகிறது. ஸ்விங் பவுலிங்கிற்கு பெயர் பெற்றவரான வாசிம் அக்ரம், டியூக்ஸ்(Dukes) பந்து, கூக்கபரா பந்தை விட    அதிகம் திரும்பும் (ஸ்விங்) என்பதால் இது இந்திய அணிக்கு தலைவலியை உண்டாக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

இந்திய அணி பேட்ஸ்மேன்கள் கடந்த சில காலங்களாக ஸ்விங் மற்றும் பவுன்ஸ் பந்துகளுக்கு எதிராக திணறி வருகின்றனர். லண்டன் ஓவல் மைதானத்தை பொறுத்தவரை ஆகஸ்ட் இறுதி மற்றும் செப்டம்பர் ஆரம்ப வாரங்களில் இங்கு பிட்ச் உலர்ந்ததாக(Dry) பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும், ஆனால் டெஸ்ட் உலகக்கோப்பை இறுதிப்போட்டி ஜூன் தொடக்கத்தில் நடக்கிறது.

இந்த சமயங்களில் ஓவல் மைதானம் புதிதாக(Fresh Pitch) இருக்கும், இது ஸ்விங்கிற்கு கூடுதலாக ஒத்துழைக்கும், அதாவது அதிக நேரம் பந்து ஸ்விங் ஆகும், மேலும் பவுன்சும் ஆகும். இதுபோன்ற மைதானங்களில் ஆஸ்திரேலிய அணி அதிகமுறை விளையாடியிருப்பதால் அதன் தன்மை அவர்களுக்கு நன்கு தெரியும். இதனால் டெஸ்ட் உலகக்கோப்பையை வெல்வதில் அதிக ஃபேவரைட் அணியாக ஆஸ்திரேலியா தான் உள்ளது என்று அக்ரம் கூறியுள்ளார்.

Published by
Muthu Kumar

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

8 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

9 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

9 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

10 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

10 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

11 hours ago