இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, சச்சின் டெண்டுல்கரின் 17 ஆண்டுகால சாதனையை இன்றைய போட்டியில் முறியடித்தார்.
ஆஸ்திரேலியா-இந்தியா இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி, கான்பெர்ரா மாகாணத்தில் நடைபெற்று வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இன்று ஆறுதல் வெற்றிபெறும் நோக்குடன் இந்திய அணி டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி தற்பொழுது தீவிரமாக விளையாடி வருகிறது.
இன்றைய போட்டியில் 23 ரன்கள் அடித்தால் 12,000 ரன்களைக் கடந்த வீரர் எனும் பட்டியலில் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஷிகர் தவான் வெளியேறிய பின் களமிறங்கிய கோலி, நிதானமாக ஆடி 23 ரன்கள் குவித்து, 12,000 ரன்களை கடந்த வீரர்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்தார். இந்த சாதனையை இந்திய அணியில் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் 300 இன்னிங்ஸ் ஆடி குவித்த நிலையில், 242 இன்னிங்ஸ் மட்டுமே ஆடி சச்சினின் 17 ஆண்டுகால சாதனையை கோலி முறியடித்தார்.
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…