ஐபிஎல்லில் இருந்து வெளியேறும் மயங்க் யாதவ் ? இது தான் காரணம் !

Published by
அகில் R

Mayank Yadav : லக்னோ அணியின் வேக பந்து வீச்சாளரன மயங்க் யாதவ் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேற உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் வேக பந்து வீச்சாளரான 21 வயதான இளம் வீரர் மயங்க் யாதவ் மொத்தமாக இந்த ஐபிஎல் தொடரில் 4 போட்டிகளில் விளையாடி உள்ளார். அதில் அவர் பந்து வீசி 7 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். இவரது பந்து வீச்சில் சிறப்பான அம்சம் என்வென்றால் மணிக்கு 156 கீ.மி வேகத்தில் பந்தை வீசுவார் அதிலும் ஒரு ஓவரில் 6 பந்துகளிலும் வித்தியாசமான லைன்னில் பந்தை வீசுவார். இவரது மிகசிறந்த பேட்மேன்கள் கூட தடுமாறி இருக்கின்றனர்.

இவர் அறிமுகமான முதல் போட்டியிலே சிறப்பாக பந்து வீசி அந்த போட்டியின் ஆட்டநாயகன் விருதை பெற்றார். மேலும், தொடர்ந்து அடுத்த போட்டியிலும் சிறப்பாக பந்து வீசி ஆட்டநாயகன் விருதை பெற்றார். ஐபிஎல் தொடரில் அறிமுகமான முதல் 2 போட்டிகளில் தொடர்ந்து ஆட்டநாயகன் விருதை வென்ற இளம் வீரர் என்ற சாதனையை இவர் படைத்தார். அதன் பிறகு அடி வயிற்றில் ஏற்பட்ட காயம் காரணமாக இவர் அடுத்தடுத்து போட்டிகளில் விளையாடாமல் இருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் நடைபெற்ற மும்பையுடனான போட்டியில் இவர் மீண்டும்  களமிறங்கினார்.

அந்த போட்டியிலும் 3 ஓவர்கள் முழுவதுமாக பந்து வீசிய இவர் 4-ஓவரில் முதல் பந்தை வீசிய போது மீண்டும் காயம் காரணமாக வெளியேறினார். இதை பற்றி லக்னோ அணி தரப்பில் கூறுவது என்னவென்றால், மயங்க் யாதவுக்கு அடிவயிற்றில் சதை கிழுவு ஏற்பட்டிருக்கலாம், இதனால் அவர் எஞ்சியுள்ள போட்டியில் விளையாடா முடியாமல் போகலாம், மேலும் ஒரு வேளை லக்னோ அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றால் கூட நாங்கள் அவரை விளையாட வைக்கலாம்.

ஆனால், அவரது உடலுக்கு அது நல்லதில்லை என லக்னோ அணி தரப்பில் கூறியுள்ளனர்.  அதே நேரத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் வேக பந்து வீச்சாளருக்கு தரும் சிறப்பு ஒப்பந்தம் வழங்க தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஒரு வேளை அவருக்கு அந்த ஒப்பந்தம் கிடைத்தால் காயத்துக்கான சிகிச்சை பொறுப்பை தேசிய கிரிக்கெட் அகாடமியின் மருத்துவ குழு பொறுப்பேற்று ஏற்றுக்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Published by
அகில் R

Recent Posts

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…

10 hours ago

”தமிழக மீனவர்களை மீட்க” – அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…

10 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்க – தவெக.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

10 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., ஜெய்பீம் படம் பார்த்த முதல்வர் எங்கே? – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…

11 hours ago

பூரி ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழப்பு.., ரூ.25 லட்சம் நிவாரணம்.!

ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…

11 hours ago

”மின் கட்டண உயர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” – அமைச்சர் சிவசங்கர்.!

சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…

14 hours ago