Nellai Royal Kings won
டிஎன்பிஎல் தொடரின் இன்றைய SMP vs NRK போட்டியில், நெல்லை ராயல் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
7-வது சீசன் டிஎன்பிஎல் தொடரின் இன்றைய போட்டியில் மதுரை பாந்தர்ஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் கோவையில் உள்ள எஸ்என்ஆர் கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
இதன்படி முதலில் களம் இறங்கிய மதுரை அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் எடுத்தது இதனை அடுத்து 127 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நெல்லை அணியில் களமிறங்கிய ஸ்ரீ நெரஞ்சன் மற்றும் அருண் கார்த்திக் பொறுப்பாக விளையாடி அணிக்கு நல்ல தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர்.
நெரஞ்சன் 15 ரன்களில் ஆட்டம் இழந்ததும், ராஜகோபால் களமிறங்கி அதிரடியாக விளையாடினார். அதன்பின் அருண் கார்த்திக் 32 ரன்களில் வெளியேற, அருண்குமார் மற்றும் சோனு யாதவ் ஓரளவு ரன்கள் எடுத்த நிலையில் களத்தை விட்டு வெளியேறினார்.
இறுதியில் ராஜகோபால் மற்றும் குருசாமி இணைந்து அணியை வெற்றி இலக்கை எட்ட செய்தனர் முடிவில் நெல்லை அணி 13.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்கள் எடுத்து, 6 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக ராஜகோபால் 42* ரன்களும், கார்த்திக் 32 ரன்களும் குவித்துள்ளனர்.
சென்னை : தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் நாய் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.80 லட்சத்தை தொட்ட நிலையில் 18…
சிவகங்கை : திருப்புவனம் அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது, பல பண மோசடி…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக அறிவித்துள்ளது. 2026-ல் தவெக தலைமையில் தான் கூட்டணி…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழு கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன், பர்மிங்ஹாம்) இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்,…