டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய வரலாறு; ஜெயவர்தனே சாதனையை உடைத்த ரோஹித் சர்மா.!

Published by
Muthu Kumar

இலங்கையின் ஜெயவர்தனே சாதனையை முறியடித்து இந்திய கேப்டன் ரோஹித் சர்மா புதிய வரலாறு படைத்துள்ளார்.

வெஸ்ட் இண்டிஸ்க்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இரன்டு இன்னிங்சிலும் ரோஹித் சர்மா அரைசதம் (80 & 57) அடித்துள்ளார். இரண்டாவது இன்னிங்சில் இந்தியா அதிரடியாக விளையாடி அதிவேக சதமடித்து பார்ட்னர்ஷிப் அமைத்துக் கொடுத்தனர். முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 438 ரன்களும், வெஸ்ட் இண்டீஸ் 255 ரன்களும் எடுத்தனர்.

இதையடுத்து இரண்டாவது இன்னிங்சில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக அரைசதம் அடித்தார், அவர் 44 பந்துகளில் 5 போர்கள் மற்றும் 3 சிக்ஸர்கள் உட்பட 57 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். இந்த இன்னிங்சில் ரோஹித் 10 ரன்கள் எடுத்தபோது ஒரு புதிய வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

 

அதாவது ரோஹித் சர்மா, தொடர்ச்சியான டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 30 முறை இரட்டை இலக்க ரன்கள்(10-99) எடுத்து புதிய வரலாறு படைத்துள்ளார். இதற்கு முன்பாக இலங்கை அணியின் மஹேலா ஜெயவர்தனே, 29 தொடர்ச்சியான டெஸ்ட் இன்னிங்ஸ்களில் இரட்டை இலக்க ரன்கள் எடுத்திருந்த சாதனையை ரோஹித் சர்மா முறியடித்துள்ளார்.

ரோஹித் சர்மாவின் கடைசி 30 டெஸ்ட் இன்னிங்ஸ் ஸ்கோர்: 

12,161,26,66,25,49,34,30,36,12,83,21,19,59,11,127,29,15,46,120,32,31,12,12,35,15,43,103,80,57. இதில் ரோஹித் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழக்காமல் 30* முறையாக இந்த சாதனைப் பயணத்தில் பயணித்துக்கொண்டிருக்கிறார்.

Published by
Muthu Kumar

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

1 hour ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

2 hours ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

2 hours ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

3 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

4 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

6 hours ago