கிரிக்கெட்

ரோஹித் மற்றும் விராட் கோலி விரும்பினால் டி20 உலகக்கோப்பையில் விளையாடலாம்.! பிசிசிஐ

Published by
செந்தில்குமார்

அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் டி20ஐ உலகக்கோப்பைத் தொடரில் விளையாடுவது குறித்து முடிவு செய்ய இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் ஓவலில் நடந்த டி20 உலகக் கோப்பையின் அரையிறுதியில், இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததில் இருந்து விராட் கோலி மற்றும்  ரோஹித் ஷர்மா இருவரும் இந்தியாவுக்காக எந்த டி20ஐயும் விளையாடவில்லை.

ஐபிஎல்லில் இருந்து விலகிய பென் ஸ்டோக்ஸ்… சிஎஸ்கே அறிவிப்பு ..!

இந்தியா அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்க உள்ளது. ஆனால் ரோஹித் ஷர்மாவும் விராட் கோலியும் ஒரு வருடத்திற்கும் மேலாக டி20 ஐ விளையாடாததால், அவர்கள் இந்த டி20 உலகக் கோப்பைத் தொடரிலும் பங்கேற்கமாட்டார்கள் என்று தகவல்கள் வெளிவந்தது.

இந்நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது. அந்த விளக்கத்தின்படி, ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி இருவரும் விரும்பினால் அடுத்த ஆண்டு டி20 மற்றும் டி20 உலகக் கோப்பையில் விளையாடலாம். இந்த தொடரில் விளையாடலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்ய முழு அதிகாரமும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

IPL 2024: சர்ஃபராஸ் கான் மற்றும் மணீஷ் பாண்டேவை விடுவிக்க டெல்லி கேபிடல்ஸ் முடிவு.!

மேலும், ஒருநாள் உலகக் கோப்பையில் அதிக ரன்கள் எடுத்தவர்களை எங்களால் நீக்க முடியாது. அவர்கள் இருவரும் எங்களின் மிகப்பெரிய வீரர்கள் என்றும் தெரிவித்துள்ளது. ஒருவேளை டி20 போட்டிகளில் இருந்து விலக ரோஹித் ஷர்மா முடிவு செய்தால், ஹர்திக் பாண்டியா மட்டுமே அணிக்கு கேப்டனாக இருப்பார். இல்லையெனில் துணை கேப்டனாக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!

சென்னை : நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது.…

16 minutes ago

ஆளுநர் விருதுகள்: சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு 2 பிரிவுகளில் விண்ணப்பிக்கலாம்.!

சென்னை : தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் சார்பாக, ''ஆளுநர் விருதுகள்'' 2025 ஆம் ஆண்டிற்கான ஆளுநர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது சமூக…

57 minutes ago

அகமதாபாத் விமான விபத்து: மருத்துவ விடுதியில் மாணவர்கள் உயிர் தப்பிய காட்சி.!

குஜராத் : குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஜூன் 12 அன்று விபத்துக்குள்ளானது. இந்த…

1 hour ago

“ஈரான் ராணுவத் தளபதி அலி ஷத்மானி கொல்லப்பட்டார்” – இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு.!

தெஹ்ரான் : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் ஐந்தாவது நாளாக தொடர்கிறது. ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கும் இடையே போர் தீவிரம்…

2 hours ago

ஒரே இடத்தில் வைத்து ஜெகன் மூர்த்தி மற்றும் ஏடிஜிபி ஜெயராமனிடம் காவல்துறை விசாரணை.!

திருவள்ளூர் : சிறுவன் கடத்தல் வழக்கில் கைதான ஏடிஜிபி ஜெயராமிடம் சுமார் 17 மணி நேரம் திருத்தணி டி.எஸ்.பி. அலுவலகத்தில்…

2 hours ago

கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து.., சாலையோரம் நின்றிருந்த 2 பெண்கள் பரிதாப பலி.!

திருப்பூர் : பல்லடம் நால்ரோடு சந்திப்பில் கட்டுப்பாட்டை இழந்து கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து லாரியின் அதிக…

3 hours ago