Muttiah Muralitharan [File Image]
ஒருநாள் உலக கோப்பைத் தொடர் மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெற்று வரும் டி20 தொடரைத் தொடர்ந்து, 9வது ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பைத் தொடர் ஆனது அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. இந்த தொடர் ஜூன் 4ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது.
அமெரிக்கா ஒரு பெரிய கிரிக்கெட் போட்டியை நடத்துவது இதுவே முதல் முறையாகும். இதில் மொத்தமாக 55 போட்டிகள் நடைபெறும். உலக அளவில் தலைசிறந்த 20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில், ஏற்கனவே 18 நாடுகளின் அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையில் 2022ம் ஆம் ஆண்டுக்குப் பிறகு ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஒரு வருடத்திற்கும் மேலாக டி20 ஐ விளையாடாததால், இந்த டி20 உலக கோப்பைத் தொடரிலும் பங்கேற்கமாட்டார்கள் எனத் தகவல்கள் வெளியானது. இதற்கு விளக்கமளித்த பிசிசிஐ, ரோஹித் மற்றும் கோலி இருவரும் விரும்பினால் அடுத்த ஆண்டு டி20 மற்றும் டி20 உலகக் கோப்பையில் விளையாடலாம்.
முடிவு செய்ய முழு அதிகாரமும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று பிசிசிஐ தெரிவித்தது. இந்நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த இலங்கை கிரிக்கெட் பயிற்சியாளர் முத்தையா முரளிதரன், வரவிருக்கும் டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா கண்டிப்பாக விளையாடுவார் என்று தான் நினைப்பதாகக் கூறியுள்ளார்.
சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் இதுகுறித்து பேசிய முத்தையா, “ரோஹித் ஷர்மாவின் ஒருநாள் உலகக் கோப்பை ஆட்டத்தை நீங்கள் பாருங்கள். போட்டியின் தொடக்கத்தில் அவர் அதிரடியாக பேட் செய்து நல்ல ஸ்ட்ரைக் ரேட்டைப் பெற்றார். போட்டியில் அவர் தோல்வியடைந்ததில்லை. மேலும், அவருக்கு 36 வயதுதான் ஆகிறது. விராட் கோலியைப் போல உடற்தகுதியை வலுப்படுத்தினால் அவர் மற்றொரு உலகக் கோப்பையை விளையாடலாம்.” என்றார்.
மேலும், “ஒருநாள் போட்டிகளில் 130 ஸ்டிரைக் ரேட்டுடன் ரோஹித் சர்மா பேட்டிங் செய்தார். இந்த ஃபார்ம் டி20க்கு போதுமானது. அவர் அனுபவம் வாய்ந்த வீரர். 35 வயதிற்குப் பிறகு உங்கள் உடற்தகுதிக்கு நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். அவருக்கு ஆசை இருந்தால், நிச்சயமாக இன்னொரு உலகக் கோப்பையை விளையாடுவார் என்று நினைக்கிறேன்.” என்று முத்தையா முரளிதரன் கூறியுள்ளார்.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது. இந்த தொடரின்…
கொல்கத்தா : ஏர் இந்தியா விமானங்களில் அடுத்தடுத்து தொழில்நுட்பக் கோளாறுகள் கண்டறியப்பட்டு வருவதால் பயணிகள் மிகவும் அதிர்ச்சியடைந்து இனிமேல் விமானத்தில்…
இஸ்ரேல் : ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் தொடர் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட்…
சென்னை : வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக…
இஸ்ரேல் : ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஈரானின் அரசு…
சென்னை : சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தின் மீது, இன்று அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தாக்குதல்…