#RSAvSL: மூன்று பேர் அதிரடி சதம்.. வரலாறு படைத்த தென்னாப்பிரிக்கா! இலங்கைக்கு இமாலய இலக்கு நிர்ணயம்!

Published by
பாலா கலியமூர்த்தி

ஐசிசியின் 50 ஓவர் உலகக்கோப்பை தொடரின் நேற்று முன்தினம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தொடங்கியது. உலகக்கோப்பை தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் மோதின. இதில், நியூசிலாந்து அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. இதன்பின் நேற்று, இரண்டாவது லீக் போட்டியில், நெதர்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில், பாகிஸ்தான் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இதனைத்தொடர்ந்து இன்று சனிக்கிழமை தென்னாப்பிரிக்கா vs இலங்கை,  பங்களாதேஷ் vs ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீச்சை செய்தது. இதில், 6 விக்கெட் விதியத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி வங்கதேச அணி வென்றது. இந்த நிலையில், இரண்டாவது (4வது லீக்) போட்டி தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை இடையே நடைபெற்று வருகிறது.

டெல்லியில் அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி தொடக்க வீரரில் ஒருவரான கேப்டன் தேம்பா பவுமா 8 ரன்களில் விக்கெட்டை இழந்தார். ஆனால், மறுபக்கம் நட்சித்திர வீரர் குயின்டன் டி காக் நிதானமாக விளையாடி 84 பந்துகளில் ( 3 சிக்ஸ், 12 பவுண்டரி) சதம் அடித்து விக்கெட்டை இழந்தார்.

பின்னர் ராஸ்ஸி வான் டெர் டுசென் ஒருபக்கம் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபக்கம் அவருடன் களத்தில் இருந்த ஐடன் மார்க்ராம் அதிரடியாக விளையாடி 54 பந்துகளில் 106 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதனிடையே, வான் டெர் டுசெனும் சிறப்பாக விளையாடி தனது சத்தை பூர்த்தி செய்து, 110 பந்துகளில் 108 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். இதன்பின் வந்த ஹென்ரிச் கிளாசென் 32, டேவிட் மில்லர் 39 ரன்கள் எடுத்தனர்.

எனவே, தென்னாபிரிக்காவில் குயின்டன் டி காக், வான் டெர் டுசென் மற்றும் ஐடன் மார்க்ராம் ஆகிய மூவரும் அதிரடியான சதம் விளாசி இலங்கைக்கு ஒரு இமாலய இலக்கை நிர்ணயிக்க வழிவகுத்தனர். இறுதியாக 50 ஓவர் முடிவில் தென்னாபிரிக்கா அணி 5 விக்கெட் இழப்புக்கு 428 ரன்களை குவித்துள்ளது. இலங்கை அணி தரப்பில் அதிகபட்சமாக தில்ஷான் மதுஷங்க 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனைத்தொடர்ந்து, தென்னாபிரிக்கா அணி நிர்ணயித்த 429 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி இலங்கை அணி களமிறங்கியுள்ளது.

இதனிடையே, 50 ஓவர் உலககோப்பை வரலாற்றில் அதிகபட்ச ரன்களை அடித்த அணி என்ற வரலாறு படைத்தது தென்னாப்பிரிக்கா. கடைசியாக 2015ம் ஆண்டு ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி அடித்திருந்த 417 ரன்களே அதிகபட்சமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்தது திமுக, மீனவர்கள் மீது அக்கறையில்லை” – இபிஎஸ் விமர்சனம்!

சென்னை : மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் பரப்புரை மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு…

8 hours ago

“நடந்து முடிந்த குரூப் – 4 தேர்வை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும்” – தவெக பொதுச்செயலாளர்.!

சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய குரூப்-4 தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் என்று…

9 hours ago

பீகாரில் ஆகஸ்ட் 1 முதல் இலவச மின்சாரம் – நிதிஷ்குமார் அறிவிப்பு.!

பீகார் : இந்த ஆண்டு பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர்தலுக்கு முன்னதாக நிதிஷ் அரசு…

9 hours ago

எரிபொருள் சப்ளை ஸ்விட்சுகளை கேப்டன் ஆஃப் செய்தாரா? – இந்திய விமானிகள் சங்கம் கண்டனம்.!

டெல்லி : கடந்த மாதம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. அது போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம். அதில்…

9 hours ago

ரயிலில் ரூ.4 கோடி பிடிபட்ட விவகாரம்: பாஜகவினர் பணப்பட்டுவாடா செய்தது உறுதி – சிபிசிஐடி.!

நெல்லை : 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில்,…

10 hours ago

‘ஹாரி பாட்டர்’ நடிகைக்கு வாகனம் ஓட்ட இடைக்கால தடை.! ஏன் தெரியுமா.?

லண்டன் : 'ஹாரி பாட்டர்' படத் தொடரில் ஹெர்மியோன் கிரேன்ஜர் வேடத்தில் நடித்து பிரபலமான ஹாலிவுட் நடிகை எம்மா வாட்சன்…

10 hours ago