இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெல்வதில், ஷமியின் பங்கு மிகமுக்கியம்… பாண்டிங்.!

Published by
Muthu Kumar

இந்திய அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெல்லவேண்டுமானால் ஷமி முன்பை விட சிறப்பாக பந்துவீச வேண்டும் என பாண்டிங் கருத்து.

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் ஜூன் 7 ஆம் தேதி, லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்காக பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகளும் இதற்காக தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் இந்த இறுதிப்போட்டி குறித்து தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் இந்திய அணிக்கு கோப்பை வெல்வதில் முகமது ஷமி முக்கிய பங்காற்ற வேண்டும் என கூறியுள்ளார்.

வேகப்பந்துவீச்சாளர் பும்ரா இல்லாத நிலையில் இந்திய அணிக்கு ஷமி, கூடுதல் பொறுப்பேற்று முன்பு இருந்ததை விட சிறப்பாக பந்துவீச வேண்டும். ஆஸ்திரேலிய வீரர்களுக்கு ஷமி எப்படிப்பட்ட வீரர் என்பது தெரியும், டெஸ்ட் போட்டிகளில் புதிய மற்றும் பழைய பந்துகளிலும் ஷமி சிறப்பாக பந்துவீசக் கூடியவர்.

இந்த ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை இந்தியா வெல்ல வேண்டும் என்றால், ஷமி தனது விளையாட்டை அடுத்த லெவலுக்கு முன்னேற்ற வேண்டும். ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஸ்சென் ஆகியோர் மிடில் ஆர்டரில் எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக இருப்பவர்கள், இதனால் ஷமியின் பங்கு இந்தியாவிற்கு மிகமுக்கியம் என்று பாண்டிங் தெரிவித்துள்ளார்.

Published by
Muthu Kumar

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

12 hours ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

13 hours ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

13 hours ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

14 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

15 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

16 hours ago