Dindigul won [Image Source : Twitter/@CricinfoTamil]
டிஎன்பிஎல் தொடரின் இன்றைய ITT vs DGD போட்டியில், திண்டுக்கல் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
7-வது சீசன் டிஎன்பிஎல் தொடரின் இன்றைய போட்டியில் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் சேலத்தில் உள்ள எஸ்சிஎஃப் கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதன்படி, முதலில் களமிறங்கிய திருப்பூர் அணி வீரர்கள், 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்தனர். இதில் அதிகபட்சமாக சாய் கிஷோர் 45 ரன்களும், விஜய் சங்கர் 43 ரன்களும், துஷார் ரஹேஜா 30 ரன்களும் குவித்தனர். இதனையடுத்து, 174 ரன்கள் இலக்குடன் திண்டுக்கல் அணி களமிறங்கியது.
இதில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய விமல் குமார் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். அவருடன் களமிறங்கிய மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் சிவம் சிங் நிதானமாக விளையாடி அணிக்கு ரன்கள் சேர்த்தார். அதன்பின் களமிறங்கிய பூபதி குமாரும் 14 ரன்களில் விக்கெட்டை இழந்து வெளியேறினார்.
இதையடுத்து, ஆதித்யா கணேஷ் களமிறங்க, நிதானமாக விளையாடிய சிவம் சிங் அரைசதம் அடித்து அசத்தினார். அவரைத்தொடர்ந்து, ஆதித்யா கணேஷ் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். இறுதியில் சிவம் சிங் மற்றும் ஆதித்யா இணைந்து அணியை வெற்றி இலக்கை எட்டச்செய்தனர்.
முடிவில், திண்டுக்கல் அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் திருப்பூர் அணியை வென்றது. இதில் அதிகபட்சமாக சிவம் சிங் 74* ரன்களும், ஆதித்யா 59* ரன்களும் குவித்தனர். திருப்பூர் அணியில் சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…
கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…
பர்மிங்காம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி…
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…