அட்டகாசமான பந்து வீச்சில் திரில்லாக இங்கிலாந்தை வீழ்த்தியது தென்னாபிரிக்கா ..!

Published by
அகில் R

டி20I சூப்பர் 8:  நடந்து கொண்டிருக்கும் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் சூப்பர் 8 சுற்றின் போட்டியும், இத்தொடரின் 45-வது போட்டியுமான இன்றைய போட்டியில் தென்னாபிரிக்கா அணியும், இங்கிலாந்து அணியும் மோதியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால், பேட்டிங் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி அதிரடியுடன் ஆரம்பித்தாலும் மிடில் ஓவர்களில் சற்று விக்கெட்டுகளை இழந்து நிதானமாகவே விளையாடினர்.

இதனால், 20 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்தது. தென்னாபிரிக்கா அணியில் டி காக் 38 பந்துக்கு 65 ரன்கள் எடுத்தார். அவருக்கு பின் டேவிட் மில்லர் 28 பந்துக்கு 43 ரன்கள் விளாசி இருந்தார்.

அதனை தொடர்ந்து 164 என்ற இலக்கை எடுக்க இங்கிலாந்து அணி களமிறங்கியது. நன்றாக பேட்டிங்கை தொடங்குவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ரன்களை எடுக்க தடுமாறியது.

அதன்பின் லியாம் லிவிங்ஸ்டோன் மற்றும் ஹாரி புரூக் இருவரும் அற்புதமான ஒரு கூட்டணியை அமைத்து சரிவிலிருந்து அணியை மீட்டெடுத்தனர். இறுதி வரை நடைபெற்ற இந்த போட்டியில் வெற்றி அங்கும், இங்கும் மாறி மாறி சென்றது.

அதிரடியாக விளையாடி கொண்டிருந்த லிவிங்ஸ்டோன் 33 ரன்களுக்கு ஆட்டமிழக்க போட்டி மேலும் விறுவிறுப்பாக சென்றது. கடைசி ஓவரில் 14 ரன்கள் அடிக்க வேண்டி இருந்த நிலையில் முதல் பந்திலேயே சிறப்பாக அரை சதம் அடித்து ஆடிக்கொண்டிருந்த ஹாரி புரூக் 53 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.

அதனை தொடர்ந்து களத்தில் இருந்த சாம் கர்ரன், நோர்கியாவின் பந்தை அடிக்க முடியாமல் கோட்டை விட்டார். விறுவிறுப்பாக சென்ற இந்த போட்டியின் கடைசி ஓவரை சிறப்பாக வீசி நோர்கியா தென்னாபிரிக்கா அணியை வெற்றி பெற வைத்தார்.

இதன் மூலம் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்று சூப்பர் 8 சுற்றின் இரண்டவது வெற்றியையும் பெற்று அரை இறுதி சுற்றுக்கு ஒரு காலை எடுத்து வைத்துள்ளனர்.

Published by
அகில் R

Recent Posts

சென்னையில் போர் பாதுகாப்பு ஒத்திகை.! ‘அச்சம் வேண்டாம்’ – பேரிடர் மேலாண்மை ஆணையம்.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…

27 minutes ago

ஆபரேஷன் சிந்தூர்: வீர உரையாற்றிய இந்த சிங்கப்பெண்கள் யார்.? சிலிர்க்கும் பின்னணி..!!

டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…

2 hours ago

ஆபரேஷன் சிந்தூர் என்றால் என்ன? நள்ளிரவு பயங்கரவாதிகளின் தூக்கம் துளைத்த தரமான சம்பவம்.!

காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…

2 hours ago

10 மாநில முதலமைச்சர்களுடன் அமித் ஷா அவசர ஆலோசனை.!

டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த…

3 hours ago

ஆபரேஷன் சிந்தூரில் அசார் குடும்பத்தினர் 10 பேர் உயிரிழப்பு! பயங்கரவாதி வெளியிட்ட பரபரப்பு தகவல்!

இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…

4 hours ago

இந்தியாவின் விண்வெளி சாதனைகள் தனித்துவமானது! பிரதமர் மோடி பெருமிதம்!

டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…

5 hours ago