rohit paudel fight [file image]
டி20 உலகக்கோப்பை 2024 : ஜூன் 17 -ஆம் தேதி கிங்ஸ்டவுனில் உள்ள அர்னோஸ் வேல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நேபாளம் அணியும் வங்காளதேசம் அணியும் மோதியது. இந்த போட்டியில் நேபாளத்திற்கு எதிராக வங்காளதேசம் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் பங்களாதேஷ் வேகப்பந்து வீச்சாளர் தன்சிம் ஹசன் சாகிப் மற்றும் நேபாள கேப்டன் ரோஹித் இடையேயான வாக்கு வாதம் பெரிய அளவில் பேசும்பொருளாகி இருக்கிறது. நேபாளம் அணி 9 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்து தத்தளித்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது. தொடக்க ஆட்டக்காரர்களான குஷால் புர்டெல் மற்றும் அனில் சாஹ் ஆகியோரை ஏற்கனவே வெளியேற்றிய டான்சிம் ரோஹித்துக்கு எதிராக இரண்டு டாட் பால்களை எடுத்தார்.
எனவே, நேபாளம் அணி 107 ரன்களைத் துரத்திய மூன்றாவது ஓவரில், ஓவர் முடிந்ததும், டான்சிம் மற்றும் ரோஹித் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து முறைக்க தொடங்கினார்கள். பின் இருவரும் நேருக்கு நேர் கோபத்துடன் வந்து உனக்கு என்ன பிரச்சனை என்ன என்ன? என முறைத்துக்கொண்டு மோதிக்கொண்டனர். பின் சண்டை முற்றிவிடக்கூடாது என அக்கம் பக்கத்தில் இருந்த வீரர்கள் மற்றும் களத்தில் இருந்த நடுவர் வேகமாக வந்து தலையிட்டு சண்டை போடவேண்டாம் என அட்வைஸ் கொடுத்து பிரித்து வைத்தனர்.
நடுவர்கள் வந்து சொன்ன பிறகு இருவருமே சைலண்டாக அப்டியே திரும்பினார்கள். இருப்பினும் திடிரென இருவரும் களத்தில் நின்று கொண்டு இருக்கும்போதே வாக்கு வாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
லண்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இரண்டு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடி வருகிறது.…
கம்சாட்கா : ரஷ்யாவின் கம்சாட்கா தீபகற்பத்திற்கு அருகே இன்று (ஜூலை 30, 2025) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில்…
சென்னை : பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று அக்கட்சி தலைவர் ,விஜய் தலைமையில் வெற்றிபேரணியில்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் நடிகர் விஜய், சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில்…
திருவாரூர் : அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, மடப்புரம் அஜித்குமார் (26) கொலை…
வாஷிங்டன் : ஜூலை 30, 2025: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 20…