Virat CenturySRH [Image-Twitter/@IPL]
கிரிக்கெட்டில் ஒரு கிங் தான், அது விராட் கோலி தான் என பாகிஸ்தான் வீரர் முகமது ஆமிர் கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் நேற்று ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி வீரர் விராட் கோலி சதமடித்து அசத்தினார். கேப்டன் டுபிளெஸ்ஸியுடன் இணைந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி க்ளாஸன் அதிரடி சதத்துடன் 20 ஓவர்களில் 186/5 ரன்கள் குவித்தது.
இதையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணி 19.2 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டும் இழந்து 187 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கோலி 100 ரன்கள்(12 போர்கள், 4 சிக்ஸர்கள்) மற்றும் டுபிளெஸ்ஸி 71 ரன்கள்(7 போர்கள், 2 சிக்ஸர்கள்) குவித்தனர். கோலியின் இந்த ஆட்டத்தை பலரும் பார்த்து பாராட்டி வருகின்றனர்.
கோலி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னதாக மீண்டும் தனது பழைய பார்முக்கு திரும்பிவிட்டார் என ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆமிர் விராட் கோலியின் பேட்டிங்கை பார்த்து வியந்து பாராட்டியுள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்வீட்டில், கிரிக்கெட்டில் ஒரு கிங் தான், அது விராட் கோலி தான். உங்களது ஆட்டம் சிறப்பாக இருந்தது. தலை வணங்குகிறேன் என பதிவிட்டுள்ளார்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…