நடப்பு உலகக்கோப்பை தொடர் கடந்த மே 30-ம் தேதி தொடங்கியது.இந்த தொடரில் மொத்தமாக 10 அணிகள் மோதியது.அதில் அரையிறுதிக்கு நியூஸிலாந்து ,இந்தியா , ஆஸ்திரேலியா , இங்கிலாந்து ஆகிய நான்கு அணிகள் இடம் பெற்றனர்.
முதல் அரையிறுதி போட்டியில் நியூஸிலாந்து அணி இந்திய அணியை வீழ்த்தியது. இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா , இங்கிலாந்து அணிகள் மோதியது. இப்போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
இன்றைய இறுதி போட்டியில் நியூஸிலாந்து அணியும் ,இங்கிலாந்து அணியும் மோத உள்ளது. இப்போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.இந்த இரு அணிகளும் இதுவரை ஒருமுறை கூட உலகக்கோப்பையை கைப்பற்றியது கிடையாது.
இதனால் உலகக்கோப்பையை வெல்ல போவது யார் ? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. இந்நிலையில் உலகக்கோப்பையின் மொத்த பரிசு தொகையை ஐசிசி அறிவித்து உள்ளது.இன்று இறுதி போட்டியில் உலகக்கோப்பையை வெல்லும் அணிக்கு 27 கோடியே 42 லட்சம் வழங்கப்படும். இன்றைய இறுதி போட்டியில் தோல்வியடைந்த அணிக்கு 13 கோடியே 71 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும் என ஐசிசி அறிவித்து உள்ளது .
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…