கிங் கோலியின் சதமும் மிஸ்.. சாதனையும் மிஸ் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Published by
பாலா கலியமூர்த்தி

ஒருநாள் உலகக்கோப்பையின் 33ஆவது லீக் போட்டியில் இலங்கை – இந்தியா அணிகள் மோதி வருகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங்கை தேர்வு செய்ததால், இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

இலங்கைக்கு எதிரான போட்டியில் வென்றால், முதல் அணியாக உலகக்கோப்பை அரை இறுதி போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பும் இந்திய அணி பெறும். அதுமட்டுமில்லாமல், இலங்கைக்கு எதிரான இந்த போட்டியில் களமிறங்குவதன் மூலம், இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, சச்சின் டெண்டுல்கரின் இரண்டு முக்கிய சாதனைகளை முறியடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

இதனால் ரசிகர்கள் இன்றைய போட்டியை எதிர்பார்த்து காத்திருந்தனர். அதன்படி, முதலில் இந்திய அணி களமிறங்கிய நிலையில் ரோஹித் சர்மா தொடக்கத்திலேயே விக்கெட்டை இழக்க, விராட் கோலி, சுப்மன் கில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். இதில், விராட் கோலி, ஒரே ஆண்டில் 1000 ரன்களை கடந்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார்.

இன்றைய போட்டியில் விராட் கோலி 34 ரன்கள் அடித்தால், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் நடப்பாண்டில் 1000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனை இருந்த நிலையில், விராட் கோலி 34 ரன்கள் அடித்து சாதனை படைத்தார். ஏற்கனவே, ஒரே ஆண்டில் ஆயிரம் ரன்களை 7 முறை சச்சின் கடந்த நிலையில்,  தற்போது விராட் கோலி ஒரே ஆண்டில் ஆயிரம் ரன்களை 8 முறை தொட்டு சாதனை படைத்தார்.

இதனைத்தொடர்ந்து, தனது அரை சதத்தை கடந்து சிறப்பாக விளையாடி வந்த விராட் கோலி, சதம் அடித்து மாற்று சச்சினின் சாதனையை சமன் செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. அதாவது, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் 49 சதங்கள் அடித்துள்ள நிலையில், விராட் கோலி 48 சதங்கள் அடித்திருந்தார். இதனால், இன்றைய போட்டியில் விராட் கோலி சதம் அடித்து சாதனை புரிவார் என ஆவலுடன் ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால், 94 பந்துகளில் 88 ரன்கள் எடுத்திருந்த நிலையில், விக்கெட்டை இழந்து அதிர்ச்சி தந்தார். இதனால், தனது 49வது சதத்தை தவறவிட்ட விராட் கோலி, சச்சின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பையும் தவறவிட்டார். எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு, விராட் அவுட்டானது அதிர்ச்சியும், ஏமாற்றத்தையும் அளித்தது.

அதுமட்டுமில்லாமல், 49வது சதத்தை விராட் கோலி அடித்திருந்தால், அதிவேகமாக இந்த மைல்களை எட்டிய வீரர் என்ற சாதனையும் படைத்திருப்பார். இதனிடையே, விராட் கோலியுடன் சேர்ந்து, சுப்மன் கில்லும் தனது சதத்தை தவறவிட்டு 92 ரன்களில் விக்கெட்டை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

இந்தியா போட்டியை நீங்க பாத்துக்கோங்க…நான் BBL போறேன்! இங்கிலாந்துக்கு டாடா சொன்ன ஆர்ச்சர்!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது. இந்த தொடரின்…

11 minutes ago

அடுத்தடுத்து கோளாறாகும் ஏர் இந்தியா விமானங்கள்? பதற்றத்தில் பயணிகள்!

கொல்கத்தா : ஏர் இந்தியா விமானங்களில் அடுத்தடுத்து தொழில்நுட்பக் கோளாறுகள் கண்டறியப்பட்டு வருவதால் பயணிகள் மிகவும் அதிர்ச்சியடைந்து இனிமேல் விமானத்தில்…

45 minutes ago

டெஹ்ரானில் இருந்து உடனடியாக அனைவரும் வெளியேறுங்கள்! அலர்ட் கொடுத்த டொனால்ட் டிரம்ப்!

இஸ்ரேல் : ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் தொடர் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட்…

1 hour ago

இன்று இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

சென்னை : வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக…

2 hours ago

ஈரான் அரசு தொலைக்காட்சி அலுவலகத்தை நொறுக்கிய இஸ்ரேல்.! தாக்குதலின் நேரடியாக ஒளிபரப்பு காட்சி..,

இஸ்ரேல் : ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஈரானின் அரசு…

10 hours ago

மதிமுக அலுவலகத்தில் அடையாளம் தெரியாத நபர் கல் வீச்சு தாக்கியதால் பரபரப்பு.!

சென்னை : சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தின் மீது, இன்று அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தாக்குதல்…

11 hours ago