நடப்பு சீசனின் 2வது முறையாக, ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் கோலிக்கு அபராதம் விதித்தது ஐபிஎல் நிர்வாகம்.
கடந்த 26ம் தேதி நடைபெற்ற 32 லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில், பெங்களூரு அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டூ பிளசிஸ் காயம் காரணமாக இம்பாக்ட் வீரராக மட்டுமே களமிறங்கிய நிலையில், விராட் கோலி பெங்களூரு அணி கேப்டனாக செயல்பட்டார்.
இந்த நிலையில், ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மெதுவாக பந்துவீசியதற்காக, அப்போட்டியில் பெங்களூருவின் கேப்டனாக செயல்பட்ட விராட் கோலிக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நடப்பு சீசனின் 2வது முறையாக, ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் மெதுவாக பந்துவீசியதற்காக கோலிக்கு அபராதம் விதித்தது ஐபிஎல் நிர்வாகம்.
போட்டியில் விளையாடிய வீரர்களுக்கும், ரூ.6 லட்சம் அல்லது போட்டியின் ஊதியத்தில் 25% ( எது குறைவோ) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக லக்னோவுக்கு எதிரான போட்டியில் மெதுவாக பந்துவீசியதற்காக பெங்களூரு கேப்டன் டூ பிளசிஸ்-க்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்திருந்தது ஐபிஎல் நிர்வாகம் என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி : மதுரை எலியார்பட்டி மற்றும் தூத்துக்குடி புதூர் பாண்டியபுரம் ஆகிய இரண்டு சுங்க சாவடிகளில் கட்டணம் வசூலிக்க ஜூன்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் நடத்திய "மறக்குமா நெஞ்சம்" என்கிற தலைப்பில் இசை நிகழ்ச்சி ஒன்றை 2023ம் ஆண்டு…
மேகாலயா : இந்தூரைச் சேர்ந்த ராஜா ராகுவன்ஷி மற்றும் சோனம் ராகுவன்ஷி என்ற தம்பதியினர் கடந்த மே 11ம் தேதி…
டெல்லி : இந்த வருடம் இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளை சொந்த மண்ணில் எதிர்கொள்ள உள்ளது.…
கோழிக்கோடு : கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள பேப்பூர் கடற்கரையில் ஒரு சரக்குக் கப்பல் தீப்பிடித்தது. இந்தக் கப்பல் சிங்கப்பூர்…
சென்னை : தவெகவில் இன்று புதிதாக இணைந்த முன்னாள் IRS அதிகாரி அருண்ராஜ்-க்கு கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கி…