ஐபிஎல்2024 : ‘ரியான் பராக்கை பார்த்து கற்று கொள்ளுங்கள் ..’ – முன்னாள் கிரிக்கெட்டர் இர்பான் பதான் புகழாரம்

Published by
அகில் R

ஐபிஎல்2024 : நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ரியான் பராக்கை முன்னாள் இந்திய கிரிக்கெட் வேக பந்து வீச்சாளர் இர்பான் பதன் புகழ்ந்து X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஐபிஎல் தொடரில் 9-துவது போட்டியாக நடைபெற்ற ராஜஸ்தான், டெல்லி அணிகளுக்கு இடையே ஆன போட்டியில் நேற்று ராஜஸ்தான் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக ராஜஸ்தான் அணியின் இளம் ஆள்-ரவுண்டர் வீரரான ரியான் பராகின் அதிரடி ஆட்டமே ஆகும்.

இவர் நேற்று நடைபெற்ற டெல்லி அணியுடனான போட்டியில் 45 பந்துகளில் 84* ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இறுதி வரை களத்தில் இருந்தார். அதன் பிறகு பேட்டிங் செய்த டெல்லி அணியும் இலக்கை எட்ட முடியாமல் தோல்வியடைந்தது. இதனால் ஆட்டத்தின் போக்கை மாற்றி ஆட்டநாயகன் விருதும் ரியான் பராக் பெற்றிருந்தார்.

இதனை தொடர்ந்து அவருக்கு கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர், அதே போல இந்திய அணியின் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் தனது X தளத்தில் ரியான் பராகை புகழ்ந்து பதிவிட்டுருந்தார். அவர் இரண்டு பதிவுகளை அடுத்தடுத்து பதிவிட்டு இருந்தார். அதில் முதல் பதிவில், “அடுத்த இரண்டு ஆண்டுகளில், ரியான் பராக் இந்தியாவுக்காக விளையாடுவார் ..” என்று முன்கூட்டிய கணித்தது போல பதிவிட்டிருந்தார்.

மேலும், அரை மணி நேர இடைவெளியில் அடுத்த பதிவை அவர் பதிவிட்டார். அந்த பதிவில், “உங்கள் நலனுக்காக சொல்கிறேன் இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டை ஒருபோதும் விளையாட்டாக எடுத்துக்கொள்ளாதீர்கள். ரியான் பராகை பார்த்து கற்று கொள்ளுங்கள். நடப்பு ஐபிஎல் தொடரில் அவர் டன் கணக்கில் ரன் குவித்து அவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்”, என்று கிரிக்கெட்டை எதிர்காலமாக கொண்ட இளைஞர்களை ஊக்குவிக்கும் விதத்தில் இது போல பதிவிட்டு இருந்தார்.

Recent Posts

தடை செய்தாலும் மீண்டும் வருவோம்.! பெயரை மாற்றி சேவையை தொடரும் ரேபிடோ – உபர்.!

கர்நாடகா : போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெங்களூரு உட்பட, இந்தியாவின் முக்கிய நகரங்களில் விரைவான மற்றும் மலிவு விலையில் பைக்…

1 hour ago

”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!

டெல் அவிவ்: இஸ்ரேல், ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது…

1 hour ago

அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!

சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகன் ராஜாவை ரூ.17 கோடி பண மோசடி வழக்கில் சென்னை மத்திய…

3 hours ago

”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!

சென்னை : நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது.…

3 hours ago

ஆளுநர் விருதுகள்: சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு 2 பிரிவுகளில் விண்ணப்பிக்கலாம்.!

சென்னை : தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் சார்பாக, ''ஆளுநர் விருதுகள்'' 2025 ஆம் ஆண்டிற்கான ஆளுநர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது சமூக…

4 hours ago

அகமதாபாத் விமான விபத்து: மருத்துவ விடுதியில் மாணவர்கள் உயிர் தப்பிய காட்சி.!

குஜராத் : குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஜூன் 12 அன்று விபத்துக்குள்ளானது. இந்த…

4 hours ago