ஐபிஎல் பிளேஆப்ஸில் ஒருவேளை மழை குறுக்கிட்டு விளையாட முடியாவிட்டால் என்ன நடக்கும்..!

Published by
Muthu Kumar

ஐபிஎல் பிளேஆப்ஸில் ஒருவேளை மழை குறுக்கிட்டு ஆட்டம் தடைபட்டால் என்ன நடக்கும் இங்கே பார்க்கலாம்…

ஐபிஎல் 2023 தொடர் ஒருவழியாக இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்து பிளேஆப் சுற்று போட்டிகள் இன்று தொடங்குகின்றன. இன்று நடைபெறும் முதல் தகுதிச்சுற்று போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் சேப்பாக்கம் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன.

நாளை நடைபெறும் வெளியேற்று சுற்று போட்டியில் மும்பை மற்றும் லக்னோ அணிகள் சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகின்றன. இரண்டாவது தகுதிச்சுற்று போட்டி குஜராத் நரேந்திரமோடி ஸ்டேடியத்தில் வரும் 26 ஆம் தேதியும், இறுதிப்போட்டி அதே மைதானத்தில் 28 ஆம் தேதியும் நடைபெறுகிறது.

ஒருவேளை பிளேஆப் சுற்று போட்டிகளின் போது மழை குறுக்கிட்டு ஆட்டம் தடை பட்டால், 5 ஓவர்கள் முறை பின்பற்றப்படும், அதுவும் முடியாவிட்டால் சூப்பர் ஓவர் முறை அதுவும் நடக்க வாய்ப்பு இல்லாத பட்சத்தில், புள்ளிப்பட்டியலில் முதலிடம் வகிக்கும் அணியே வென்றதாகக் கருதப்படும்.

அதாவது இன்று சேப்பாக்கத்தில் சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கிடையே நடைபெறும் முதல் தகுதிச்சுற்று போட்டியில் மழை குறுக்கிட்டு விளையாட முடியாமல் போனால், முதலிடத்தில் இருக்கும் குஜராத் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு நுழைந்துவிடும்.

இதேபோல் பிளேஆப்சின் எந்த போட்டியும் நடைபெறா விட்டால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திலிருக்கும் அணியான குஜராத் அணி, சாம்பியன் பட்டம் வென்றதாகக் கூறப்படும். ஆனால் சேப்பாக்கத்தில் இன்று மழை பெய்வதற்கான எந்தவித வாய்ப்பும் இல்லையென்று தகவல் வெளியாகியுள்ளது.

Published by
Muthu Kumar

Recent Posts

ஸ்கெட்ச் போட்ட AI..ஒரே மாதத்தில் ரூ.10 லட்சம் கடனை அடைத்த அமெரிக்க பெண்!

டெலவேர்  : அமெரிக்காவின் டெலவேர் மாகாணத்தைச் சேர்ந்த 35 வயது ஜெனிபர் ஆலன், ChatGPT-யின் வழிகாட்டுதலுடன் ஒரே மாதத்தில் ரூ.10…

20 minutes ago

உங்க கொள்கைக்கும் எங்க கொள்கைக்கும் ரொம்ப தூரம்”… த.வெ.க குறித்த கேள்விக்கு சீமான் பதில்!

சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக சமீபத்தில் அறிவித்திருந்தது. எனவே, இது குறித்து அரசியல்…

52 minutes ago

”புதிய கட்சி தொடங்கிய ஈலோன் மஸ்க்” – டிரம்ப் என்ன சொன்னார் தெரியுமா?

வாஷிங்டன் : டெஸ்லா நிறுவனர்  எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடனான மோதலைத் தொடர்ந்து, நேற்றைய தினம் ''அமெரிக்கா…

1 hour ago

”பிரிக்ஸை ஆதரிக்கும் நாடுகளுக்கு 10 % கூடுதல் வரி” – உலக நாடுகளை எச்சரிக்கும் டிரம்ப்.!

வாசிங்டன் : பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் நாடுகள், அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடாமல், ஈரான் மீதான சமீபத்திய…

2 hours ago

18 அடி நீளம் கொண்ட ராஜநாகத்தை லாவகமாக பிடித்த பெண் வன ஊழியரின் துணிச்சல்.!

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை அருகே உள்ள குடியிருப்புப் பகுதியின் அருகில் உள்ள ஓடையில் பதுங்கியிருந்த 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை…

2 hours ago

நில மோசடி விவகாரம்: நடிகர் மகேஷ்பாபுவுக்கு நுகர்வோர் ஆணையம் நோட்டீஸ்.!

தெலுங்கானா: டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ஒரு ரியல் எஸ்டேட் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆம், ஒரு ரியல் எஸ்டேட்…

3 hours ago