PAKvCAN Preview [file image]
டி20I: நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் இன்றைய போட்டியாக பாகிஸ்தான் அணியும், கனடா அணியும் மோதுகிறது. இந்த போட்டியானது பாகிஸ்தான் அணிக்கு ஒரு வாழ்வா? சாவா? போட்டியாகும். இந்த போட்டியில் தோல்வி அடைந்தாலோ இல்லை, இந்த போட்டி மழையால் நடைபெறாமல் போனாலோ, பாகிஸ்தான் அணி இந்த உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறி விடும்.
உலகக்கோப்பை தொடரில், ‘A’ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்த 2 அணிகளும், புள்ளிப்பட்டியலில் மிகவும் மோசமான நிலைமையில் இருந்து வருகிறது. அதிலும், அயலாந்து, பாகிஸ்தான் அணிகளும் எந்த ஒரு வெற்றியையும் பெறாமல் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மேலும், இதே போல 1999-ம் ஆண்டும் பாகிஸ்தான் அணி மோசமான நிலையில் இருந்து மீண்டு வந்து உலகக்கோப்பையை வென்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது, அதே போல நிகழவேண்டும் என பாகிஸ்தான் அணி கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்ப்பரப்பில் இருந்து வருகின்றனர். இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் போட்டியானது நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதே மைதானத்தில் தான் கடந்த 2 போட்டிகளையும் பாகிஸ்தான் அணி தோல்வியுற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த 2 அணிகளும் ஒரே ஒரு முறை தான் டி20 நேருக்கு நேர் விளையாடியுள்ளனர், அதிலும் 2008-ம் ஆண்டு நடைபெற்ற அந்த போட்டியில் பாகிஸ்தான் அணி, கனடா அணியை 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன் பிறகு 16 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மோதவுள்ளது, இந்த போட்டியானது விறுவிறுப்பாக செல்லும என்பதை பொறுத்து இருந்தே பார்க்க வேண்டும்.
சென்னை : கமல்ஹாசன் நடித்துள்ள தக்லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், தமிழில் இருந்து பிறந்ததுதான்…
அகமதாபாத்: பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல் 2025) இறுதிப் போட்டி தற்போது…
அகமதாபாத் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2025ன் இறுதிப்…
அகமதாபாத்: பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல் 2025) இறுதிப் போட்டி தற்போது…
அகமதாபாத்: பெங்களூரு - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டி சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது. போட்டியை காண, நரேந்திர…
சென்னை : நடிகர் கமல்ஹாசனின் “தமிழில் இருந்து கன்னடம் தோன்றியது” என்ற கருத்து கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த…