Dhoni ravi [Image- PTI]
ஐசிசி கோப்பைகளை வெல்வது எளிதான காரியம் என எண்ணும்படி தோனி செய்து விட்டார் என ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று ஆஸ்திரேலிய அணி முதன்முறையாக ஐசிசியின் அனைத்து விதமான கோப்பைகளையும் வென்ற அணி என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்தியது. இந்திய அணி நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 164/3 ரன்களுடன் ஐந்தாம் நாள் ஆட்டத்தை தொடங்கியதும் விக்கெட்கள் சீட்டுக்கட்டுகள் போல் சரிந்து வீழ்ந்தது.
சிறப்பான தொடக்கத்தை கொடுத்த விராட் கோலியும் 49 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த ஜடேஜா டக் அவுட் ஆகி வெளியேற இந்திய அணியின் நம்பிக்கையும் தளர்ந்தது. இறுதி நாளில் 280 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இந்திய அணி களமிறங்கி 234 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக, ஆஸ்திரேலியா 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது.
இந்த போட்டிக்கு பிறகு இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரும், வர்ணனையாளருமான ரவி சாஸ்திரி, இந்திய அணி ஐசிசி கோப்பைகளை வெல்வது எளிதானது போல் முன்னாள் இந்திய கேப்டன் தோனி மாற்றிவிட்டார் என கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, இந்திய அணி கடந்த 2013இல் ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி வென்ற பிறகு 10 ஆண்டுகள் ஆகியும் ஒரு ஐசிசி கோப்பையை கூட வெல்ல முடியாமல் திணறி வருகிறது.
ஆனால் எம்.எஸ். தோனி தலைமையில் இந்திய அணி 2007 இல் டி-20 உலகக்கோப்பை, 2011இல் ஒருநாள் உலகக்கோப்பை, 2013இல் சாம்பியன்ஸ் ட்ராபி என 3 ஐசிசி கோப்பைகளை வென்றுள்ளது. ஐசிசி கோப்பைகளை வெல்வது எளிதான விஷயமல்ல ஆனால் தோனி அதனை எளிதானது போல் நமக்கு காட்டிவிட்டார் என்று ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
சென்னை : நேற்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஒரு வழியாக நின்ற நிலையில் பதற்றம் நாடுகளின்…
கரூர் : மாவட்டம், செம்மடை அருகே நடந்த பயங்கர விபத்தில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் காலையிலே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படம்…
பெங்களூர் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த போர் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக தேதி கூட அறிவிக்கப்படாமல் முன்னதாக…
மேற்காசியா : இந்தியாவின் ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்து நாட்டுக்கு…