நாளை தொடங்கும் WTC இறுதிப்போட்டி.. கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு காயம்!

Published by
பாலா கலியமூர்த்தி

இறுதிப்போட்டிக்கான பயிற்சியின்போது ரோஹித் ஷர்மாவுக்கு இடது கட்டை விரலில் சிறிய காயம் என தகவல்.

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நாளை லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கவுள்ளது. நாளை முதல் 11 வரை லண்டனில் உள்ள கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் 2023 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன.

இதற்காக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான பயிற்சியின்போது, கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு இடது கட்டை விரலில் சிறிய காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டிக்கு முன்னதாக, லண்டனில் நெட் செஷனில் பேட்டிங் செய்யும் போது இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவின் இடது கட்டைவிரலில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் கட்டை விரலில் டேப்பைப் பயன்படுத்துவதையும், டேப் செய்யப்பட்ட கட்டை விரலுடன் வலைப்பயிற்சியில் இருந்து வெளியேறியதாகவும் கூறப்படுகிறது. பாதுகாப்பு நடவடிக்கையாக ரோஹித் சர்மா வலைப்பயிற்சியை தொடரவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, ஷுப்மான் கில், சேதேஷ்வர் புஜாரா, அஜிங்க்யா ரஹானே, முகமது ஷமி, முகமது சிராஜ் மற்றும் ஷர்துல் தாக்கூர் உட்பட பல முக்கிய வீரர்கள் பயிற்சிக்கு வரவில்லை என கூறப்படுகிறது. ரோஹித் சர்மா, கே.எஸ்.பாரத், ரவிச்சந்திரன் அஷ்வின், உமேஷ் யாதவ் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாட உள்ள நிலையில், இந்திய அணி கேபட்டனுக்கு காயம் ஏற்பட்டிருப்பது கவலையை அளிக்கிறது. இருப்பினும், பெரியளவு காயம் இல்லை என்றும் கூறப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

9 hours ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

10 hours ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

10 hours ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

11 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

12 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

14 hours ago