NEPIND Clash [Image source : Twitter/@Anunay_Aanand]
தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் லீக் போட்டியில் இந்திய மற்றும் நேபாள வீரர் இருவரும் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
பெங்களூரு ஸ்ரீ கண்டீரவா ஸ்டேடியத்தில் நேற்று நடந்த தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் லீக் போட்டியில் (SAFF) இந்தியா மற்றும் நேபாளம் அணிகள் மோதியது. இந்த போட்டியில் இந்திய அணியில் சுனில் சேத்ரி மற்றும் மகேஷ் சிங் இருவரும் அடித்த கோல்களினால், இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில் நேபாளத்தை வீழ்த்தியது.
இதனால் இந்திய அணி தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இந்த போட்டியின் போது, இந்தியா வீரர் ராகுல் பெகே மற்றும் நேபாள வீரர் பிமல் கர்தி மகாருக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
போட்டியில் மிக உயரமாக வீசப்பட்ட பந்தை இருவரும் தலையால் அடிக்க முயற்சிக்கும் போது, நேபாள வீரர் பிமல் கர்தி கீழே விழுந்துள்ளார். பிறகு அவர் எழுந்ததும் ராகுல் பெகேவிடம் சண்டையில் ஈடுபடுகிறார். இவர்கள் இருவரையும் தடுப்பதற்கு இரு அணி வீரர் முயற்சி செய்தனர்.
பிறகு, நடுவர்கள் குறுக்கிட்டு இருவரையும் சமாதானப்படுத்தினர். முன்னதாக, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டியின் போதும் வீரர்கள் மோதலில் ஈடுபட்டனர். அந்த போட்டியிலும் பாகிஸ்தான் அணியை ஒரு கோலும் அடிக்க விடாமல் இந்தியா 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
நியூயார்க் : உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாகியுமான எலான் மஸ்க், ‘தி அமெரிக்க…
திண்டிவனம்: பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ், கட்சியின் தலைமை நிர்வாகக் குழுவில் இருந்து தலைவர்…
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…