அந்த 2 பேர் இருந்தா டி20 உலகக்கோப்பை இந்தியாவுக்கு தான் – ஏபி டி வில்லியர்ஸ்!

Published by
பால முருகன்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி இன்று மொஹாலியில் தொடங்குகிறது. இந்த டி20 தொடரில்  நீண்ட மாதங்களுக்கு பிறகு ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் டி20 போட்டிகளில் விளையாடவுள்ளார்கள். இருவரும் கடைசியாக கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியில் தான் விளையாடி இருந்தார்கள்.

அந்த போட்டிக்கு பிறகு ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் தான் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி விளையாடுகிறார்கள். இதில் இன்று நடைபெறவுள்ள முதல் போட்டியில் விராட் கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக விளையாடமாட்டார் என கூறப்படுகிறது. நீண்ட மாதங்களுக்கு பிறகு இவர்களை போன்ற அனுபவம் கொண்ட வீரர்கள் இந்த போட்டியில் விளையாடுவது இந்திய அணிக்கு பலமாக இருக்கும் என முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில், தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது கருத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய ஏபி டி வில்லியர்ஸ் ” ரோஹித் மற்றும் கோலி ஆப்கானிஸ்தான் எதிரான டி20 தொடரில் தேர்வு செய்யப்பட்டு இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

முதல் டி20 : இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதல்!

அதைப்போல, அவர்கள் வரும் டி20 உலகக் கோப்பை போட்டியிலும் இடம்பெறவேண்டும் என விரும்புகிறேன். அவர்களை போன்ற வீரர்கள் இருந்தால் கண்டிப்பாக கோப்பையை கூட வெல்லலாம்.  இதனை  20 வயது இளைஞர்கள் புரிந்துகொள்வார்கள்.  அவர்களுடைய மனதிலே விராட், ரோஹித் போன்ற சீனியர் வீரர்கள் வேண்டும் என்பது அவர்களுக்கு புரியும்.

வயது பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை என்னை பொறுத்தவரையில் அவர்கள் இருவரும் இந்த மாதிரியான முக்கிய போட்டியில் இருக்கவேண்டும்.  ஆப்கானிஸ்தானுக்கு எதிரான  டி20 தொடரில் அவர்களுடைய விளையாட்டை நான் பார்க்க மிகவும் ஆவலுடன் காத்து இருக்கிறேன்” எனவும் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

Recent Posts

தடை செய்தாலும் மீண்டும் வருவோம்.! பெயரை மாற்றி சேவையை தொடரும் ரேபிடோ – உபர்.!

கர்நாடகா : போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெங்களூரு உட்பட, இந்தியாவின் முக்கிய நகரங்களில் விரைவான மற்றும் மலிவு விலையில் பைக்…

9 hours ago

”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!

டெல் அவிவ்: இஸ்ரேல், ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது…

9 hours ago

அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!

சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகன் ராஜாவை ரூ.17 கோடி பண மோசடி வழக்கில் சென்னை மத்திய…

10 hours ago

”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!

சென்னை : நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது.…

11 hours ago

ஆளுநர் விருதுகள்: சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு 2 பிரிவுகளில் விண்ணப்பிக்கலாம்.!

சென்னை : தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் சார்பாக, ''ஆளுநர் விருதுகள்'' 2025 ஆம் ஆண்டிற்கான ஆளுநர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது சமூக…

12 hours ago

அகமதாபாத் விமான விபத்து: மருத்துவ விடுதியில் மாணவர்கள் உயிர் தப்பிய காட்சி.!

குஜராத் : குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஜூன் 12 அன்று விபத்துக்குள்ளானது. இந்த…

12 hours ago