இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளனர். வருகின்ற 24-ம் தேதி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாட உள்ளனர்.
இந்திய அணி :
விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன் ), கே.எல்.ராகுல், எஸ் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ரிஷாப் பந்த் (விக்கெட் கீப்பர்), சிவம் துபே, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரீத் பும்ரா, ஷமி, நவ்தீப் சைனி, ரவீந்திர ஜடேஜா, ஷார்துல் தாக்கூர் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.
இந்த டி20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.அதில் ரோகித் சர்மா, ஷமி இருவரும் சேர்க்கப்பட்டு உள்ளனர்.சமீபத்தில் இந்திய அணி இலங்கைக்கு எதிரான விளையாடிய டி20 தொடரில் ரோகித் சர்மா , ஷமி இருவரும் அணியில் இடம்பெறவில்லை.
இலங்கை தொடரில் ரோகித் சர்மாவிற்கு பதிலாக விக்கெட் கீப்பர் சஞ்சு சம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் சஞ்சு சம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணியுடன் விளையாடிய 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் நாளை இந்திய அணி விளையாட உள்ளனர்.
இந்நிலையில் இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மாவிற்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் நாளை நடைபெறும் இந்த போட்டியில் ரோகித் சர்மா கலந்து கொள்வாரா..? அல்லது கலந்து கொள்ளமாட்டாரா..? என்ற கேள்வி எழுந்து உள்ளது.ரோஹித் சர்மா மும்பையில் நடைபெற்ற பயிற்சி போட்டியில் ஈடுபட்டு இருந்தபோது காயம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கழுகு பட ஹீரோ கிருஷ்ணாவை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே இந்த…
திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் ரூ.174.39 கோடி செலவில் 11 துறைகள் சார்ந்த 90 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர்…
அமெரிக்கா : நேற்றைய தினம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கான் 9 ராக்கெட் ஏவப்பட்டது. இது…
திருப்பத்தூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருப்பத்தூர் மாவட்டத்தில் மண்டவாடி என்னுமிடத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.174.39 கோடி செலவில்…
விழுப்புரம் : பாமக தலைவர் பதவி தொடர்பாக தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த…
நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…