இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளனர். வருகின்ற 24-ம் தேதி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாட உள்ளனர்.
இந்திய அணி :
விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன் ), கே.எல்.ராகுல், எஸ் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ரிஷாப் பந்த் (விக்கெட் கீப்பர்), சிவம் துபே, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரீத் பும்ரா, ஷமி, நவ்தீப் சைனி, ரவீந்திர ஜடேஜா, ஷார்துல் தாக்கூர் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.
இந்த டி20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.அதில் ரோகித் சர்மா, ஷமி இருவரும் சேர்க்கப்பட்டு உள்ளனர்.சமீபத்தில் இந்திய அணி இலங்கைக்கு எதிரான விளையாடிய டி20 தொடரில் ரோகித் சர்மா , ஷமி இருவரும் அணியில் இடம்பெறவில்லை.
இலங்கை தொடரில் ரோகித் சர்மாவிற்கு பதிலாக விக்கெட் கீப்பர் சஞ்சு சம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் சஞ்சு சம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணியுடன் விளையாடிய 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் நாளை இந்திய அணி விளையாட உள்ளனர்.
இந்நிலையில் இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மாவிற்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் நாளை நடைபெறும் இந்த போட்டியில் ரோகித் சர்மா கலந்து கொள்வாரா..? அல்லது கலந்து கொள்ளமாட்டாரா..? என்ற கேள்வி எழுந்து உள்ளது.ரோஹித் சர்மா மும்பையில் நடைபெற்ற பயிற்சி போட்டியில் ஈடுபட்டு இருந்தபோது காயம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி சிவாங்கி சிங் பாகிஸ்தானில் பிடிபட்டதாக கூறப்படும்…
சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…
காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…
டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…