சூர்யகுமார் யாதவுக்கு அறுவை சிகிச்சை? இந்த ஐபிஎல்லில் விளையாடுவது சந்தேகம்?

Published by
பால முருகன்

இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் தற்போது வயிற்றுப்பகுதியில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். இந்த பிரச்சனை காரணமாக  சூர்யகுமார் யாதவுக்கு குடலிறக்கத்துக்கான அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர் வரும் ஐபிஎல் தொடரில் விளையாடுவது சந்தேகம் தான் எனவும் புதிய தகவல்கள் பரவி வருகிறது.

கடைசியாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரின் இறுதிப்போட்டியில் சூர்யகுமார் யாதவ் பீல்டிங் செய்துகொண்டிருந்த போது அவருக்கு காயம் ஏற்பட்டது. கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் உடனடியாக லண்டன் சென்று அறுவை சிகிச்சை செய்துகொண்டார். பிறகு ஓய்வெடுக்கவேண்டும் என்பதால் அவர் வரும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள டி20 போட்டியில் விளையாடமாட்டார் என கூறப்பட்டது.

கால்பந்து ஜாம்பவான் ஃபிரான்ஸ் பெக்கன்பவுர் காலமானார்..!

இதனையடுத்து, அவர் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதும் சந்தேகம் தான் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. ஏனென்றால், சூர்யகுமார் யாதவுக்கு கணுக்கால் பகுதியில் காயம் ஏற்பட்டது மட்டுமின்றி தற்போது அவருக்கு ஹெர்னியா என்கிற குடலிறக்க பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளாராம். இந்த தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

ஹெர்னியா என்கிற குடலிறக்க பிரச்சனையால் சூர்யகுமார் யாதவ் குடலிறக்கத்துக்கான அறுவை சிகிச்சை எடுத்துக்கொள்ள முடிவு எடுத்து இருக்கிறாராம். தற்போது சூர்யகுமார் யாதவ் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த பிரச்சனை காரணமாக அறுவை சிகிச்சை செய்துகொள்ள சூர்யகுமார் யாதவ் ஜெர்மனி செல்ல இருக்கிறாராம்.

இந்த அறுவை சிகிச்சையை அவர் மேற்கொண்டால் கண்டிப்பாக 2 மாதங்களுக்கு மேலாக அவர் ஓய்வெடுக்கவேண்டு இருக்குமாம்.  எனவே, இதன் காரணமாக அவர் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவது என்பது சந்தேகம் தான் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

மேலும், சூர்யகுமார் யாதவ் போல ஹர்திக் பாண்டியா வும் காயம் காரணமாக இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் விளையாடுவது சந்தகேம் தான் எனவும் தகவல்கள் வெளியானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

”மனிதகுலம் சுவாசிக்க, சமநிலைப்படுத்த மற்றும் முழுமையடைய யோகா இன்றியமையாதது” – பிரதமர் மோடி.!

ஆந்திர பிரதேசம்: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, சிறப்பு யோகா தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். ஆந்திர பிரதேசத்தின்…

8 minutes ago

பழிக்கு பழி.., இஸ்ரேல் விஞ்ஞானிகளுக்கு குறி வைத்த ஈரான் ஏவுகணைகள்.!

ரெஹோவோட் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் போருக்கு முடிவே இல்லை என்று தெரிகிறது. ஈரானின் அணுசக்தி தளங்கள்,…

21 minutes ago

”இதற்காக தான் டிரம்பின் அழைப்பை நிராகரித்தேன்” – பிரதமர் மோடி விளக்கம்.!

புவனேஸ்வர் : ஒடிசா மாநிலத்தின் புவனேஸ்வரில் நேற்று நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார். ஒடிசாவில் பாஜக அரசின் முதலாமாண்டு…

48 minutes ago

ஈரானின் பிரத்யேக வான்பாதை.., 290 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்.!

ஈரான் : ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக ஈரானில் தங்கி கல்வி பயின்று வரும் இந்திய மாணவர்களை…

1 hour ago

புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டம்: இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : சென்னையில் ரூ.80 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ள வள்ளுவர் கோட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். ‘குறள்…

2 hours ago

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்.., கேப்டன் சதம்.. துணை கேப்டன் அரைசதம்.!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் நாளில் இந்தியா அபாரமாக விளையாடி ரன்களை குவித்தது. தொடக்க வீரர்…

2 hours ago