இங்கிலாந்து அணியின் துணை பயிற்சியாளராக பொல்லார்ட் நியமனம்!

Published by
பால முருகன்

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்கள் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை பார்க்க ஆவலுடன் காத்துள்ளனர். டி20 உலகக்கோப்பை போட்டி அடுத்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்படவுள்ளது. டி20 போட்டிகள் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது.

இந்நிலையில், மேற்கிந்தியத் தீவுகளுக்காக 101 டி 20 போட்டிகளில் விளையாடிய முன்னாள் கேப்டன் கீரன் பொல்லார்ட், இந்த முறை டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்துடன் இணையவுள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணியின் துணைப் பயிற்சியாளராக கீரன் பொல்லார்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி! இந்திய வீரர்களை குறித்த சுனில் கவாஸ்கர்! 

ஏற்கனவே இந்த தகவல் வெளியாகி இருந்த நிலையில், தற்போது இந்த தகவல் பற்றி இங்கிலாந்து கிரிக்கெட் அணியே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. டி20 போட்டிகள் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது.  எனவே, மேற்கிந்தியத் தீவுகள் மைதானம் எப்படி இருக்கும் என்பது கீரன் பொல்லார்டுக்கு நன்றாக தெரியும் என்பதால் இங்கிலாந்து அணியின் துணைப் பயிற்சியாளராக கீரன் பொல்லார்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

கீரன் பொல்லார்ட் டி20 கிரிக்கெட்டின் ஜாம்பவான் என்பதில் சந்தேகமில்லை. அந்த அளவிற்கு தன்னுடைய பேட்டிங் மூலம் டி20 போட்டிகளில் அதிரடியாக விளையாடி இருக்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இவர் தற்போது பயிற்சியிலும் கலக்கி வருகிறார். ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு  பேட்டிங் பயிற்சியாளராக உள்ளார்.  தற்போது இங்கிலாந்தின் ஆலோசகர் பயிற்சியாளராக மாறி கீரன் பொல்லார்டின் ஆளுமையை அதிகரித்துள்ளது.

Published by
பால முருகன்

Recent Posts

தடை செய்தாலும் மீண்டும் வருவோம்.! பெயரை மாற்றி சேவையை தொடரும் ரேபிடோ – உபர்.!

கர்நாடகா : போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெங்களூரு உட்பட, இந்தியாவின் முக்கிய நகரங்களில் விரைவான மற்றும் மலிவு விலையில் பைக்…

1 hour ago

”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!

டெல் அவிவ்: இஸ்ரேல், ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது…

1 hour ago

அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!

சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகன் ராஜாவை ரூ.17 கோடி பண மோசடி வழக்கில் சென்னை மத்திய…

3 hours ago

”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!

சென்னை : நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது.…

3 hours ago

ஆளுநர் விருதுகள்: சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு 2 பிரிவுகளில் விண்ணப்பிக்கலாம்.!

சென்னை : தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் சார்பாக, ''ஆளுநர் விருதுகள்'' 2025 ஆம் ஆண்டிற்கான ஆளுநர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது சமூக…

4 hours ago

அகமதாபாத் விமான விபத்து: மருத்துவ விடுதியில் மாணவர்கள் உயிர் தப்பிய காட்சி.!

குஜராத் : குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஜூன் 12 அன்று விபத்துக்குள்ளானது. இந்த…

4 hours ago