பாரிஸ் ஒலிம்பிக் : பிவி சிந்து அதிர்ச்சி தோல்வி ..! ரசிகர்கள் ஏமாற்றம் ..!

Published by
அகில் R

பாரிஸ் ஒலிம்பிக் : பிரான்ஸ் நகரின் தலைநகரமான பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் தொடரில் நேற்றைய 6-வது நாளின் இறுதியில் நடைபெற்ற பேட்மிண்டன் தகுதி சுற்று போட்டியில் இந்திய அணியின் சார்பாக பிவி.சிந்து கலந்து கொண்டு விளையாடினார்.

நடைபெற்ற இந்த போட்டியில் சீனாவின் வீராங்கணையான ஹி பிங்க் ஜியாவோவை எதிர்த்து விளையாடினார். இந்த போட்டியில் ஆரம்பம் முதலே ஜியாவோ ஆதிக்கம் செலுத்தினார். இதன் விளைவாக முதல் செட்டை 19-21 என்று இழந்தார். அதை தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டிலும் 14-21 என பிவி.சிந்து தோல்வியடைந்தார்.

இதனால்,காலிறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பையும் இழந்ததுடன் தொடரிலிருந்தும் வெளியேறி உள்ளார். இதன் காரணமாக இந்தியாவிற்கு பேட்மிண்டன் போட்டியில் ஒரு பதக்கம் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அந்த கனவு தகர்ந்துள்ளது.

ஆனாலும் மறுமுனையில் ஆண்கள் தனி நபருக்கான பிரிவில் இந்தியாவை சேர்ந்த லக்ஷயா சென் ரவுண்டு-ஆஃப் சுற்றில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளார். நாளை (ஆகஸ்ட்-2) நடைபெற இருக்கும் காலிறுதி சுற்றில் லக்ஷயா சென் நாளை தைவான் நாட்டைச் சேர்ந்த சோ டியான் சென் உடன் விளையாடவுள்ளார்.

Published by
அகில் R

Recent Posts

”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!

சென்னை : நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது.…

32 minutes ago

ஆளுநர் விருதுகள்: சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு 2 பிரிவுகளில் விண்ணப்பிக்கலாம்.!

சென்னை : தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் சார்பாக, ''ஆளுநர் விருதுகள்'' 2025 ஆம் ஆண்டிற்கான ஆளுநர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது சமூக…

1 hour ago

அகமதாபாத் விமான விபத்து: மருத்துவ விடுதியில் மாணவர்கள் உயிர் தப்பிய காட்சி.!

குஜராத் : குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஜூன் 12 அன்று விபத்துக்குள்ளானது. இந்த…

1 hour ago

“ஈரான் ராணுவத் தளபதி அலி ஷத்மானி கொல்லப்பட்டார்” – இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு.!

தெஹ்ரான் : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் ஐந்தாவது நாளாக தொடர்கிறது. ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கும் இடையே போர் தீவிரம்…

2 hours ago

ஒரே இடத்தில் வைத்து ஜெகன் மூர்த்தி மற்றும் ஏடிஜிபி ஜெயராமனிடம் காவல்துறை விசாரணை.!

திருவள்ளூர் : சிறுவன் கடத்தல் வழக்கில் கைதான ஏடிஜிபி ஜெயராமிடம் சுமார் 17 மணி நேரம் திருத்தணி டி.எஸ்.பி. அலுவலகத்தில்…

3 hours ago

கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து.., சாலையோரம் நின்றிருந்த 2 பெண்கள் பரிதாப பலி.!

திருப்பூர் : பல்லடம் நால்ரோடு சந்திப்பில் கட்டுப்பாட்டை இழந்து கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து லாரியின் அதிக…

3 hours ago