டென்னிஸில் ரஃபேல் நடால் ஓய்வு? விளக்கமளித்த நடால்!

Published by
அகில் R

ரஃபேல் நடால் : டென்னிஸில் நம்பர் 1 வீரராக திகழ்ந்த ரஃபேல் நடால் பிரெஞ்சு ஓபன் தொடரிலிருந்து வெளியேறிவுடன் அவரது ஓய்வு குறித்த விளக்கத்தை ரசிகர்களுக்கு அளித்திருந்தார்.

நடப்பாண்டிற்கான பிரெஞ்சு ஓபன் தொடரானது கடந்த மே-26ம் தேதி அன்று பாரிஸ்ஸில் உள்ள ஸ்டேட் ரொலாண்ட் கரோஸ் மைதானத்தில் தொடங்கியது.  இந்த தொடரில் மே-27ம் தேதி நடந்த ஆடவர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று போட்டியில் டென்னிஸ் ஜாம்பவானான ரஃபேல் நடால் ஜெர்மனி வீரரான அலெக்சாண்டர் ஸ்வெரேவ்வை எதிர்த்து விளையாடினார்.

இந்த போட்டியில் முதலில் இருந்தே சிறப்பாக ஆதிக்கம் செலுத்தி விளையாடினார் அலெக்சாண்டர், ரஃபேல் நடால் கடுமையாக நெருக்கடி கொடுத்தும் அலெக்சாண்டர் அந்த போட்டியை 3-6, 6-7, 3-6 என நேர் செட் கணக்கில் தோற்கடித்தார். இந்த தோல்வியின் மூலம் ரஃபேல் நடால் பிரெஞ்சு ஓபன் தொடரிலிருந்து வெளியேறி இருக்கிறார்.

மேலும், இந்த பிரெஞ்சு ஓபன் தொடர் தான் அவரது கடைசி தொடர் எனவும் இதன் பிறகு அவர் ஓய்வு பெறுவார் எனவும் அவரது ரசிகர்களால் எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்நிலையில், இந்த போட்டி முடிந்த பிறகு ரஃபேல் நடால் தனது ஓய்வு குறித்து பேசி இருந்தார். இவர் பேசிய போது, “இங்கு நான் விளையாடியது தான் எனது கடைசி போட்டியா? என்று எனக்கு தெரியவில்லை. என்னால் 100% சதவீதம் அதை இப்போது கூற முடியவில்லை.

ஒருவேளை இதுதான் என் கடைசி போட்டி என்றால், அதை முழுக்க முழுக்க அனுபவித்து விளையாடி இருக்கிறேன். மேலும், இன்று எனது இந்த உணர்வுகளை வார்த்தைகளால் விவரிக்க கஷ்டமாக இருக்கிறது. இதே மைதானத்தில் இந்த ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் விளையாட நான் மீண்டும் வருவேன் என நம்புகிறேன். அது மட்டும் தான் எனக்கு இப்பொது உத்வேகம் அளிக்கிறது. அதற்காக நான் முழுமையாக என்ன தயார்ப்படுத்திக் கொள்ள விரும்புகிறேன்” என கூறி இருந்தார்.

இதன் மூலம், ரஃபேல் நடால் அவரது ஓய்வு குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்ததுடன் அவரது ரசிகர்களுக்கும் ஆறுதல் அளித்துள்ளார். இவர் 14 முறை பிரெஞ்சு தொடரில் சாம்பியன் பட்டம் வென்றதுடன், 22 முறை கிராண்ட்ஸ்லாம் (Grand Slam) தொடரையும் கைப்பற்றி ஒரு காலத்தில் நம்பர் 1 டென்னிஸ் வீரராக கோடி கட்டி பறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

We love you too Rafa, and we hope to see you again next year ????#RolandGarros pic.twitter.com/7hX4Gw46WE

Published by
அகில் R

Recent Posts

”ஜூன்-5ல் ‘தக் லைஃப்’ படத்தை வெளியிட வேண்டும்” – தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கம் கடிதம்.!

சென்னை : கமல்ஹாசன் நடித்துள்ள தக்லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், தமிழில் இருந்து பிறந்ததுதான்…

5 minutes ago

ஆர்சிபிக்கு முதல் அடி: தூக்கி அடித்த சால்ட்.., அலேக்காக கேட்ச் புடித்த ஸ்ரேயாஸ் ஐயர்.!

அகமதாபாத்: பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல் 2025) இறுதிப் போட்டி தற்போது…

25 minutes ago

PBKS vs RCB: ஐபிஎல் இறுதிப்போட்டி.., வானில் இந்திய ராணுவத்திற்கு மரியாதை.!

அகமதாபாத் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2025ன் இறுதிப்…

41 minutes ago

PBKS vs RCB: ஐபிஎல் இறுதிப் போட்டி.., வெல்லப்போவது யார்? டாஸ் – பிளேயிங் லெவன் இதோ.!

அகமதாபாத்: பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல் 2025) இறுதிப் போட்டி தற்போது…

1 hour ago

அகமதாபாத்தில் மழை: இறுதிப்போட்டி நடைபெறுமா? மழை குறுக்கிட்டால் கோப்பை யாருக்கு.?

அகமதாபாத்: பெங்களூரு - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டி சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது. போட்டியை காண, நரேந்திர…

2 hours ago

“தமிழகத்தில் எந்த கன்னட திரைப்படமும் வெளியாகாது” – கொந்தளித்த தி.வேல்முருகன்.!

சென்னை : நடிகர் கமல்ஹாசனின் “தமிழில் இருந்து கன்னடம் தோன்றியது” என்ற கருத்து கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

2 hours ago