hardik and rohit [File Image]
2024 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) ஏலம் வரும் டிசம்பர் 19ம் தேதி துபாயில் உள்ள கோகோ கோலா அரங்கில் நடைபெறவுள்ள நிலையில், ட்ரேடிங் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது. 2 ஆண்டுகளுக்கு முன்பு விடுவித்த ஹர்திக் பாண்டியாவை மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த பரபரப்பான நேரத்தில் இன்னும் அதிர்ச்சி தரும் விதமாக, 2024ம் ஆண்டுக்கான 17-வது சீசன் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2013 சீசனில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணியை ஐந்து முறை ஐபிஎல் கோப்பையைப் பெறச்செய்த ரோஹித் ஷர்மாவிற்கு பதிலாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளது மும்பை அணியின் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் ஷர்மாவுக்குப் பதிலாக ஹர்திக் பாண்டியா இடம்பிடித்ததற்கு என்ன காரணமாக இருக்கும் என்கிற யோசனை அனைவரிடத்திலும் வந்துள்ளது. ஹர்திக் பாண்டியாவை மும்பை அணி வாங்குவதற்கும், அவரை கேப்டனாக நியமிப்பதற்கும் அவருடைய கேப்டன் பதவி ஒரு காரணமாக இருக்கலாம்.
ஏனெனில் அவர் இரண்டு ஆண்டுகள் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த போது, இரண்டு ஐபிஎல் சீசனிலும் அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்றார். இதில் ஒரு சீசனில் சாம்பியன் பட்டத்தையும் வென்றார். தான் கேப்டனாக நியமிக்கப்பட்ட இரண்டு தொடர்களிலும் தனது அணியை இறுதிப்போட்டி வரைக்கொண்டு சென்ற கேப்டன் என்ற பெருமையை ஹர்திக் பாண்டியா பெற்றார்.
இது ஒரு காரணமாக கூறப்பட்டாலும், விளையாட்டில் எதுவும் நிரந்தரம் இல்லை என்பது போல ஒவ்வொரு வீரரும் என்றாவது ஒருநாள் ஆட்டத்தை விட்டு விலகுவார்கள். அந்த வகையில் 36 வயதான ரோஹித் ஷர்மாவும் ஐபிஎல் தொடரிலிருந்து ஒய்வு பெறலாம். எனவே மும்பை அணிக்கு ரோஹித் ஷர்மாவிற்கு சமமான ஒரு கேப்டன் வேண்டும் என்ற எண்ணத்தில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
தஞ்சாவூர் : கடந்த ஜூன் 13ம் தேதி டெல்டா பாசனத்துக்காகமேட்டூர் அணை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, கல்லணையை வழக்கமாகத் திறக்கும் தேதி…
சென்னை : விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் சார்பில், 2025-ஆம் ஆண்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு…
மகாராஷ்டிரா : மகாராஷ்டிரா மாநிலம், புனே அடுத்த குந்தமாலாவில் பிரசித்தி பெற்ற இந்திரயாணி ஆற்றுப்பாலம் உள்ளது. பழமை வாய்ந்த ஆற்றுப்பாலத்திற்கு…
சென்னை : சென்னையில் உள்ள அண்ணா நகரில் பார்க்கிங் பிரச்சினையாக மாறி வரும் நிலையில், அதற்கு தீர்வு காண ஸ்மார்ட்…
அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே மூன்றாவது நாளாக மோதல் தொடர்கிறது. இதில் இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று ட்ரோன் தாக்குதல்களை…
குஜராத் : அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் கொல்லப்பட்ட 241 பயணிகளில் ஒருவரான குஜராத் முன்னாள் முதல்வர்…