இந்த மாதம் இல்லையாம்..ஜெமினி AI வெளியீடு தள்ளிவைப்பு.! கூகுள் அறிவிப்பு.!

Published by
செந்தில்குமார்

செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில்நுட்பம் மூலம் மனிதர்களால் செய்ய முடியாத வேலையை கூட எளிதில் செய்ய முடியும். இதனை பல தொழில்நுட்ப நிறுவனங்கள் உருவாக்க முயற்சி செய்து வருகின்றன. அந்த வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஓபன்ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவு நிறுவனம் சாட் ஜிபிடி (Chat GPT)  என்ற ஏஐ சாட் போட்டை அறிமுகம் செய்தது.

இந்த ஏஐ அறிமுகமான சில வாரங்களிலேயே அனைத்து பயனர்களையும் தன் பக்கம் ஈர்த்தது. இதற்கு போட்டியாக கூகுள் போன்ற பல முன்னணி நிறுவனங்கள் ஏஐ சாட் பாட்டுகளை உருவாக்கி அறிமுகம் செய்து வருகின்றன. கூகுள் கடந்த மார்ச் மாதம் ‘பார்ட்’ எனும் ஏஐ சாட் பாட்டை அறிமுகம் செய்தது. இதனையடுத்து சில கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது

பிறகு இந்தியா உட்பட 180க்கும் மேற்பட்ட நாடுகளில் பார்ட்  ஏஐ அறிமுகமானது. சார்ஜ் சாட் ஜிபிடிக்கும் பார்ட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், சாட் ஜிபிடி 2021 ஆம் ஆண்டுக்கு முந்தைய தகவல்களை மட்டுமே ஆய்வு செய்து தரக்கூடியது ஆகும். ஆனால் பார்ட் தற்போது இருக்கக்கூடிய தகவல்கள் வரை கூகுளில் தேடி தரக்கூடியது.

சேட் ஜிபிடியை ஓரம்கட்ட வருகிறது ‘ஜெமினி AI’..! கூகுளின் அடுத்த மாஸ்டர் பிளான்..?

இந்த பார்ட்-ஐ அறிமுகம் செய்ததோடு கூகுள் நிறுவனம் விடாமல், அதன் முன்னணி ஏஐ நிறுவனமான டீப் மைண்ட் (DeepMind) மூலம் ஜெமினி எனப்படும் புதிய ஏஐ-ஐ உருவாக்கியுள்ளது. இதனால் ஜெமினி பல வகையான தரவுகளை கையாள முடியும். ஓவியங்கள், உரைகள், படங்கள் போன்றவற்றை புரிந்துகொள்ளும் மற்றும் உருவாக்கும் திறன் கொண்ட இதில், மேம்படுத்தப்பட்ட சர்ச் அல்காரிதங்களுடன் கூடிய ஏஐ அமைப்பு (AlphaGo) உள்ளது.

முதன்முதலில் இந்த ஜெமினி ஏஐ ஆனது கடந்த மே மாதம் நடந்த கூகுளின் டெவலப்பர் மாநாட்டில் வெளியானது. இதன்பிறகு இந்த டிசம்பர் மாதம் வெளியாகும் என திட்டமிடப்பட்டது. அதன்படி, வெளியீட்டு நிகழ்வானது நியூயார்க் வாஷிங்டன் மற்றும் கலிபோர்னியாவில் அடுத்த வாரம் நடைபெற இருந்தது. ஆனால் தற்போது ஜெமினி ஏஐ வெளியீடானது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப்பில் AI சாட் போட்.! மறைத்து வைக்க புதிய வசதி அறிமுகம்.!

ஜெமினி 1.0-வின் வெளியீடு அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது.  ஏனெனில், இந்த ஜெமினி ஏஐ-ல் ஆங்கிலம் இல்லாமல் உள்ளிடப்படும் தகவல்களுக்கு நம்பகமான தகவலை தருவதில் பிரச்சனைகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, ஜெமினி ஏஐ வெளியிடானது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும், ஜெமினி ஏஐ-ன் தாக்கம் எவ்வாறு இருக்கும் என பார்ப்பதற்கு இத்தொழில்நுட்ப உலகம் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறது.

Recent Posts

ரூ.21,000 கோடி சம்பாதித்த இந்திய யூடியூபர்கள்! யூடியூப் CEO தகவல்!

மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…

2 hours ago

6-ம் தேதி மழை இருக்கு.! எங்கெல்லாம் தெரியுமா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

2 hours ago

கள்ளழகர் திருவிழா: ”இதை செய்யவே கூடாது” கோவில் நிர்வாகம் விதித்த கட்டுப்பாடுகள்.!

மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தில், பக்தர்கள் நீரை பீய்ச்சி…

2 hours ago

களத்தில் இறங்கிய இந்திய விமானப்படை! உ.பி அதிவிரைவு சாலையில் தீவிர பயிற்சி!

லக்னோ : காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்திய முப்படைகளும் தயார்நிலையில் இருக்க பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பு…

3 hours ago

”பலரின் தூக்கத்தை கலைக்கும் காட்சி இது” – கேரள விழிஞ்சம் துறைமுகம் திறப்பு விழாவில் பிரதமர் மோடி.!

திருவனந்தபும் : கேரளாவில் ரூ.8,867 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விழிஞ்சம் துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். கேரள…

3 hours ago

கங்குவா வசூலை பீட் செய்ததா ‘ரெட்ரோ’.? முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.?

சென்னை : நடிகர் சூர்யா நடிப்பில் ரிலீசாகியுள்ள 'சூர்யா, பூஜா ஹெக்டே நடித்த 'ரெட்ரோ' திரைப்படம் நேற்று (மே 1)…

3 hours ago