சனிக்கிரகத்தில் ஆராய்ச்சி…பாம்பு ரோபோவை உருவாக்கும் நாசாவின் புதிய முயற்சி…

Published by
Muthu Kumar

சனிக்கிரகத்தின் நிலவில் உயிர்கள் இருக்கிறதா என்பதைக் கண்டறிய, பாம்பு போன்ற ரோபோவை நாசா உருவாக்குகிறது.

தேசிய வானூர்தி மற்றும் விண்வெளி நிர்வாகம் (NASA), நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் தனது ஆராய்ச்சியின் அடுத்த படியாக பூமிக்கு வெளியே உள்ள கிரகங்களில் உயிர்கள் ஏதேனும் உள்ளதா என்பதை ஆராய்ந்து வருகிறது. இதன் முயற்சியாக சனிக்கிரகத்தின் நிலவில் உயிர்கள் இருப்பதைக் கண்டறிய பாம்பு போன்ற ரோபோவை நாசா ஆராய்ச்சி மையம் உருவாக்குகிறது.

குறிப்பாக சனியின் 83 நிலவுகளில் ஒன்றான என்செலடஸின் மேற்பரப்பை அடைந்து அதன் பனிக்கட்டி அம்சங்களை ஆராயும் வகையில் இந்த பாம்பு ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது என நியூயார்க் போஸ்ட் தெரிவித்துள்ளது.

சனியின் 6-வது மிகப்பெரிய நிலவில் உயிர் வாழ்வதற்கு ஏற்ற நீர், நிலம், மற்றும் ஆதாரம் உள்ளதா என்பதைக் கண்டறிய இந்த EELS-Exobiology Extant Life Surveyor எனும் இந்த ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது.

நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தின் கூற்றுப்படி, “ஈஈஎல்எஸ்(EELS) அமைப்பு என்பது நிலப்பரப்பின் உள் கட்டமைப்புகளை ஆராய்வதற்கும், வாழ்விடத்தை மதிப்பிடுவதற்கும், வாழ்வதற்கான ஆதாரங்களைத் தேடுவதற்கும் வடிவமைக்கப்பட்ட ஒரு மொபைல் கருவி தளமாகும்.

இது கடல்-உலகத்தால் ஈர்க்கப்பட்ட நிலப்பரப்பு, திரவமயமாக்கப்பட்ட ஊடகம், மூடிய தளம் கொண்ட சூழல்கள் மற்றும் திரவங்களை கடந்து செல்லும் வகையில் ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தது.

Published by
Muthu Kumar

Recent Posts

அல்-நசீர் அணியிலேயே மேலும் 2 ஆண்டுகள் விளையாடும் ரொனால்டோ.. சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

சவூதி : உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவுதி ப்ரோ லீக் அணியான அல் நசார் கால்பந்து…

49 minutes ago

”தமிழ்நாட்டில் NDA கூட்டணி ஆட்சி.., அதில் பாஜக அங்கம் வகிக்கும்” – அமித்ஷா மீண்டும் உறுதி.!

சென்னை : 2026-ல்தமிழகத்தில் நிச்சயம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும், அதில் பாஜகவும் அங்கம் வகிக்கும் என அமித்…

1 hour ago

ஜூலை 4ஆம் தேதி விஜய் தலைமையில் த.வெ.க. மாநில செயற்குழு கூட்டம்.!

சென்னை : தமிழக வெற்றிக்கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம், அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் வருகிற ஜூலை 4ம் தேதி…

2 hours ago

கமலுக்கு அழைப்பு விடுத்த ஆஸ்கர் விருது குழு.! மொத்தம் 534 பேருக்கு அழைப்பு.!

லாஸ் ஏஞ்சல்ஸ் : 98வது அகாடமி விருதுகள் வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் 15ம் தேதி 6 அன்று…

2 hours ago

”உலகப் புகழ் கூமாபட்டியிலிருந்து.., இப்போ எப்படி இருக்கு? – விருதுநகர் முன்னாள் ஆட்சியர் பதிவு.!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள 'கூமாபட்டி' கிராமம் திடீரென ரீல்ஸ்களில் வைரலாக தொடங்கியது. 'இந்த பக்கம்…

2 hours ago

கேரளா மழை: 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை, 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை.!

திருவனந்தபுரம் : கேரளாவில் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாலும், அணைகள் திறக்கப்படுவதாலும் அம்மாநிலம் முழுவதும்…

3 hours ago