தொழில்நுட்பம்

ரிலையன்ஸ் ஜியோவின் புதிய மலிவு விலை ‘கிளவுட் லேப்டாப்’.! விரைவில் அறிமுகம்.!

Published by
செந்தில்குமார்

நாம் ஒரு லேப்டாப்பை நமக்கென சொந்தமாக வாங்கி வேண்டுமென்றால், குறைந்தது ரூ.50,000 தேவைப்படும். ஆனால் இப்போது முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பிரிவான ரிலையன்ஸ் ஜியோ, ஒரு ‘கிளவுட் லேப்டாப்பை’ உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இதன் விலை சுமார் ரூ.15,000 ஆக இருக்கலாம்.

இதன் மூலம் கிட்டத்தட்ட ரூ.35,000 வரை செலவானது குறைகிறது. இன்னும் ஒரு சில மாதங்களில் இந்த கிளவுட் லேப்டாப்பை இந்திய சந்தைக்கு கொண்டு வரவேண்டும் என்ற முனைப்பில் ரிலையன்ஸ் நிறுவனம் எச்பி (HP), ஏசர் (Acer), லெனோவோ (Lenovo)  போன்ற முன்னணி லேப்டாப் உற்பத்தியாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

OpenAI CEO சாம் ஆல்ட்மேன் பணிநீக்கம்.! இணை நிறுவனர் ராஜினாமா..அடுத்தடுத்து அதிர்ச்சி.!

ஜியோவின் இரண்டாவது மடிக்கணினியாக இருக்கும் இந்த கிளவுட் லேப்டாப்பிற்க்கான சோதனைகள் எச்பி குரோம்புக்கில் நடத்தப்படுகின்றன. இதில் பயனர்கள் அனைத்து சேவைகளையும் விரைவான வேகத்தில் அணுகமுடியும். ஜியோ கிளவுட் லேப்டாப்க்கான மாதாந்திர சந்தாவை வழங்க திட்டமிட்டுள்ளது. இந்த மாதச் சந்தாவிற்கான விலை பின்னர் முடிவு செய்யப்படும்.

புதிய லேப்டாப்பை வாங்க விரும்பாதவர்கள், கம்ப்யூட்டிங் அம்சங்களை அணுகுவதற்கு கிளவுட் பிசி சாப்ட்வேரை எந்த டெஸ்க்டாப்பிலும் அல்லது ஸ்மார்ட் டிவியிலும் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம். இந்த மடிக்கணினியின் விலை அதன் ஸ்டோரேஜ், செயலாக்க சக்தி, பிராசஸர், பேட்டரி போன்றவற்றைப் பொறுத்து நிர்ணயிக்கப்படும்.

வாட்ஸ்அப்பில் அறிமுகமாகும் AI சாட் போட்.! மெட்டா நிறுவனம் அசத்தல்.!

மேலும், கடந்த ஆண்டு ஜூலை 31ம் தேதி, 16,499 ரூபாய் என்ற பட்ஜெட் விலையில் 4ஜி லேப்டாப்பான ஜியோபுக்கை வெளியிட்டது. இந்த ஜியோபுக் ஜியோ ஓஎஸ் மூலம் இயங்குகிறது. இருப்பினும், புதிய கிளவுட் லேப்டாப் விண்டோஸ் உட்பட பல்வேறு ஓஎஸ்களில் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

3 hours ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

3 hours ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

4 hours ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

4 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

6 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

7 hours ago