முந்துங்கள் இன்றுடன் முடிவடைகிறது.! தெற்கு ரயில்வே துறையில் 3655 காலியிடங்களுக்கான வேலை வாய்ப்பு.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • தெற்கு ரயில்வே துறையில் அப்பரண்டீஸ் பயிற்சி பெற 3655 காலியிடங்கள் உள்ளது.
  • அப்பரண்டீஸ் பயிற்சி பெற 10-வது முடித்த 50% சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ரயில்வே துறையில் பணிபுரிய வேண்டும் என்பது பலருக்கும் கனவாக இருக்கும். பின்னர் அதற்கு முறையான அப்பரண்டீஸ் பயிற்சி பெற்றால் வாய்ப்புகள் கிடைக்கும். தற்போது தெற்கு ரயில்வே துறையில் அப்பரண்டீஸ் பயிற்சி பெற 10-வது முடித்த 50% சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் 3655 காலியிடங்கள் உள்ளது. இந்த வாய்ப்பு இன்றுடன் முடிவடைகிறது.

மெக்கானிக்கல் வேலைவாய்ப்பு : தெற்கு ரயில்வே பிட்டர், வெல்டர் மெக்கானிக், எலக்ட்ரீசியன், டீசல் மெக்கானிக், ஏசி, பிரிட்ஜ் மெக்கானிக், எம்எம்வி, எலெக்ட்ரானிக் மெக்கானிக், பிஏஎஸ்எஸ்ஏ, எம்எல்டி ரேடியாலஜி, எம்எல்டி கார்டியாலஜி, கார்பெண்டர், பெயிண்டர், வயர்மேன், டர்னர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஒராண்டு முதல் இரண்டு ஆண்டு அப்பரண்டீஸ் பயிற்சி அளிக்கப்படும்.

படிப்பு மற்றும் வயது தகுதி : 10-ம் வகுப்பு படித்தவர்கள் பொது பிரிவினருக்கு 15 வயது முதல் 22 வயது வரை தகுதி இருக்க வேண்டும். ஒபிசி பிரிவினருக்கு 15 வயது முதல் 25 வயது வரையும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் 15 முதல் 27 வயது வரையும். மாற்றுத்திறனாளிகள் 15 முதல் 32 வயது வரையும். ஐடிஐ படித்தவர்கள் என்றால் பொதுபிரிவினர் 24 வயது வரையும், ஒபிசி பிரிவினர் 27 வயது வரையும், எஸ்சி எஸ்டி பிரிவினர் 29 வயது வரையும், மாற்றுத்திறனாளிகள் 34 வயது வரையும் அப்பரண்டீஸ் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் என்ற https://sr.indianrailways.gov.in/ கிளிக் செய்து இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் ஆன்லைனில் விண்ணப்பிக்க ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை.

தேர்வுமுறை : இதற்கு தேர்வு எதும் இல்லை. 10-வது மற்றும் ஐடிஐயில் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலேயே தேர்வு செய்யப்படுவார்கள். வெளிமாநிலத்தவர் இதில் கலந்து கொள்ள முடியாது. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள், மாலை 5 மணி வரை மட்டுமே கால அவகாசம் அதற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மாத சம்பளம் : மாதம் ரூ.10 ஆயிரம் அளிக்கப்படும். இந்த அப்பரண்டீஸ் பயிற்சி முடிப்பவர்களுக்கு, லெவல் 1 தேர்வு நேரடி சேர்க்கையின் போது 20% சதவீதம் வேலைக்கு அப்பரண்டீஸ் பயிற்சி பெற்றவர்களுக்கே முன்னுரிமை தெற்கு ரயில்வே துறை அளிக்கும்.

 

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

அகமதாபாத்தில் மழை: இறுதிப்போட்டி நடைபெறுமா? மழை குறுக்கிட்டால் கோப்பை யாருக்கு.?

அகமதாபாத்: பெங்களூரு - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப் போட்டி சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது. போட்டியை காண, நரேந்திர…

1 minute ago

“தமிழகத்தில் எந்த கன்னட திரைப்படமும் வெளியாகாது” – கொந்தளித்த தி.வேல்முருகன்.!

சென்னை : நடிகர் கமல்ஹாசனின் “தமிழில் இருந்து கன்னடம் தோன்றியது” என்ற கருத்து கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

25 minutes ago

கடிதத்துக்கு பதிலாக கமல் மன்னிப்பு கேட்பதில் என்ன தவறு? – தமிழிசை சௌந்தரராஜன்.!

சென்னை : நடிகர் கமல்ஹாசனின் “தமிழில் இருந்து கன்னடம் தோன்றியது” என்ற கருத்து கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தக்…

49 minutes ago

மொழி விவகாரம்: உண்மையை ஏற்பதில் உங்களுக்கு ஏன் ஈகோ? கமலுக்காக குரல் கொடுத்த சீமான்.!

சென்னை : கன்னட மொழி பற்றி பேசியதால் கமல் நடித்த தக் லைஃப் திரைப்படம் கர்நாடகாவில் வெளியாவதில் சிக்கல் நீடித்து…

2 hours ago

“கர்நாடகாவில் தக் லைஃப் வெளியீடு ஒத்திவைப்பு” – கமல் தரப்பு வழக்கறிஞர்.!

கர்நாடகா: நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள தக்லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், தமிழில் இருந்து…

2 hours ago

இந்த வருஷம் ஆர்சிபிக்கு தான் கப்! ரூ.6.4 கோடி பெட் கட்டிய ராப் பாடகர் டிரேக்!

அகமதாபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் ராயல்…

5 hours ago